Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கமலிடம் 10 நிமிடம் தனியாக பேசிய நயனதாரா
ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் பூஜைக்கு வந்த கமல்ஹாசனுடன் தனியாக 10 நிமிடம் பேசினார் நடிகை நயனதாரா. கமல்ஹாசனின் அடுத்த படத்தில் நடிக்க அப்போது அவர் வாய்ப்பு கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
விஜய்யின் துப்பாக்கியை முடித்து கீழே வைத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து ஒரு படம் தயாரிக்கப் போகிறார். படத்தின் பெயர் ராஜா ராணி. அட்லி இயக்குகிறார். இதில் ஆர்யா, ஜெய் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜை கமல்ஹாசனின் வீட்டில் வைத்து நடந்தது. அப்போது பூஜை முடிந்த பின்னர் கமல்ஹாசனுடன் பேச விரும்புவதாக நயனதாரா கூறவே, கமல்ஹாசனும் தனியாக கூட்டிச் சென்று 10 நிமிடம் பேசினார். அப்போது கமல்ஹாசனுடன் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கமல் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.
இருப்பினும் கமல்ஹாசனின் அடுத்த தமிழ்ப் படத்தில் நயனதாராவுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு வாய்ப்பு நிச்சயம் உண்டு என்று அடித்துக் கூறுகிறார்கள் பூஜைக்கு வந்தவர்கள்.