எதார்த்தமாக எடுத்த போட்டோவை.. பதார்த்தமாக பதிவேற்றி.. ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்த நயன்தாரா !
Recommended Video
சென்னை : தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு என்ன மதிப்பு என்ற கேட்டவர்களுக்கு முன் சிம்மாசனம் அமைத்தவர் நயன்தாரா. படிபடியாய் வளர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன் வசப்படுத்தி தமிழ் சினிமாவில் தொடமுடியாத உயரத்தை அடைந்துள்ளார்.
நயன்தாரா கடைசியாக பிகில், சயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்திருந்தார் ,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ,அடுத்தாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன்' படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது பிஸியாக நடித்து வரும் நயன்தாரா தனக்கு படங்களின் இடையே கிடைக்கும் விடுமுறையில் தனது காதலனுடன் ஊர் சுற்றிப்பார்க்க சென்றுவிடுகிறார் .அதே போல் தற்போது வெளியூர் செல்லும் போது ஏர்போட்டில் எடுக்க பட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார் .
தற்போது பதிவேற்றியுள்ள இந்த புகைப்படத்தில் போகும் வழியில் மிக எதார்த்தமான முறையில் எடுக்கபட்ட அந்த போட்டோவை பதிவேற்றியிருக்கிறார் .பெரும்பாலும் நடிகைகள் தனது சமூக வலைத்தளங்களில் இப்படி மேக்கப் இல்லாமல் எந்த போட்டோவையும் பொதுவாக பதிவேற்ற மாட்டார்கள் ,ஆனால் நயன்தாரா எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் என்று தனது படங்களின் மூலம் நிரூபித்தவர் .அதனால் இவருக்கு இது பெரிய விசயமெல்லாம் இல்லை .
இந்த புகைப்படத்தை ரேன்டம் கிளிக் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா பதிவேற்றி இருக்கிறார் .நயன்தாரா முன்பை போல் இல்லாமல் தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் மிகவும் ஆக்கடிவ்வாக இருக்கிறார்.தனது செயல்களை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி விடுகிறார்


Click it and Unblock the Notifications











