Don't Miss!
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இது என்னடா கொடுமை..அம்மாவா நடிக்கிறாரா நயன்தாரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !
சென்னை : அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் கசிந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படம் விஸ்வாசம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்பொழுது முழுவீச்சுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லாக் டவுன் காரணமாக அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதையில் நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் கசிந்து ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீக்கில் இருந்தபோதே சென்றார்.. 'இதற்காகத்தான் சினிமாவை விட்டு விலகினேன்' மனம் திறந்த பிரபல நடிகை!
டிஆர்பியிலும் முன்னிலையில்
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா சமீபத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் எப்போதெல்லாம் ஒளிபரப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
முக்கிய பிரபலங்கள்
இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்த நிலையில், தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தையும் இவர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் முக்கியமான பிரபலங்கள் பலரும் இணைந்திருக்கின்றனர் என்ற செய்தி வெளியாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.
நயன்தாராவின் கதாபாத்திரம்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக உள்ள நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மற்றும் மீனா என 4 கதாநாயகிகள் ஒரே திரைப்படத்தில் இணைந்துள்ளதால் அவர்களின் கதாபாத்திரம் என்னவென்று கணிக்க முடியாமல் ரசிகர்கள் தவித்து வந்த நிலையில், தற்பொழுது நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
லாக்டவுன் காரணமாக
அவ்வாறு கசிந்துள்ள தகவலின் படி நயன்தாரா கீர்த்தி சுரேஷிற்கு அம்மாவாக அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த செய்தியை கேட்ட நயன்தாராவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாதி ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட நிலையில், லாக்டவுன் காரணமாக இரண்டாம் பாதியின் படப்பிடிப்பு இன்னும் தொடங்க முடியாமல் இருக்கின்றது.
காட்டுத் தீ போல பரவி
நயன்தாரா கீர்த்தி சுரேஷின் அம்மாவாக நடிக்கிறார் என்கிற செய்தியை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல வேகமாக பரவி வருகிறது.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் உருவாகிவரும் மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற திரைப்படங்கள் விரைவில் தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க உள்ள நிலையில், இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது.