Just In
- 27 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 8 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தெலுங்கில் நடிக்க நயன்தாரா - பிரகாஷ் ராஜூக்கு ஒரு ஆண்டு தடை
ஹைதராபாத்: அனாமிகா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஒத்துழைப்பு தராததால் தெலுங்கு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது தெலுங்கு இயக்குநர்கள் சங்கம்.
அதேபோல ஆகடு படத்தின் உதவி இயக்குநரைத் திட்டியதற்காக நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, பிரகாஷ் ராஜ் இருவருமே தெலுங்கில் முக்கியமான நடிகர்கள்.

அனாமிகா
சேகர் கம்மூலா இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் அனாமிகா. தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு, செய்தியாளர் சந்திப்பு என எந்த நிகழ்வுக்கும் நயன்தாரா வரவில்லை. எனவே மிகவும் கொதிப்படைந்திருந்தார்கள் இயக்குநரும் தயாரிப்பாளரும்.

புகார்
இது பற்றி தெலுங்கு பட இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு, இயக்குநர் சங்கம் சார்பில் நேற்று நயன்தாராவுக்கு எதிராக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்த ஒரு ஆண்டுக்கு நயன்தாரா தெலுங்கில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

பிரகாஷ் ராஜ்
இதேபோல் ஆகடு பட ஷூட்டிங்கின்போது உதவி இயக்குனர்களை தரக்குறைவாக திட்டியதாக பிரகாஷ்ராஜ் மீது புகார் தரப்பட்டிருந்தது. அந்தப் படத்திலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டார்.

ஒரு ஆண்டு
பின்னர் அந்தப் புகார் குறித்து இயக்குநர் சங்கம் விசாரணை மேற்கொண்டது. அவர் திட்டியதும், தரக்குறைவாக நடந்து கொண்டதும் நிரூபணம் ஆனதாகக் கூறி, தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.