Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நயன்தாராவோட பெஸ்ட் குவாலிட்டி... உச்சி முகரும் விக்னேஷ் சிவன்
சென்னை : விக்னேஷ் சிவன் ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
நடிகை நயன்தாராவுடன் தான் இருக்கும் சிறப்பான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நயன்தாராவிடம் தன்னை மிகவும் கவர்ந்த குணம் குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நயன்தாராவுடனான காதல்
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் தங்களது காதலை ரசிகர்களிடையே வெளிப்படுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இருவரும் கொச்சின் சென்றபோது இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
விருதுகளை பெற்றுவரும் கூழாங்கல்
மேலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் இவர்கள், சிறப்பான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றனர். இவர்களது வெளியீட்டில் ரிலீஸ் ஆகவுள்ள கூழாங்கல் திரைப்படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்று பெருமை சேர்த்து வருகிறது.
கேள்வி -பதில் செஷன்
மேலும் தரமணி புகழ் வசந்த் ரவி நடிப்பில் ராக்கி படமும் இவர்களது பேனரின்கீழ் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய விக்னேஷ் சிவன், தனது டைரக்ஷன் மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார்.
Recommended Video
நயன்தாராவின் தன்னம்பிக்கை
மேலும் நயன்தாராவுடன் தான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் தன்னை கவர்ந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து நயன்தாராவிடம் தன்னை கவர்ந்த குணம் அவரது தன்னம்பிக்கை என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி வருகிறது.