Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதெப்டி என்னைக் கேட்காம இப்படி பத்திரிகை அடிக்கலாம்? - முருகதாஸ் மீது நயன் கோபம்
நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக பத்திரிகை அலுவலகங்களுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தார் ராஜாராணி பட பிஆர்ஓ.
'ஆர்யா வெட்ஸ் நயன்தாரா' என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில் ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும் அதில் இடம் பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன.
இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது 'ராஜாராணி' படத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரம் அது என்று கூறினர்.
இந்தப் படத்தை ஃபாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பவர் ஏஆர் முருகதாஸ். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக இப்படி ஒரு போலி திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு விளம்பரம் தேடினார்.
முதலில் நயன்தாரா ஒப்புதலோடு இதை வெளியிட்டதாக கூறினர். ஆனால் உண்மையில் அவர் அனுமதி எதுவும் அளிக்கவில்லையாம்.
தன்னைக் கேட்காமல் இப்படிச் செய்த இயக்குநர் முருகதாஸ் மீது கடும் கோபம் கொண்ட நயன், அவரை போனில் சத்தம் போட்டதோடு, படத்தின் விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சியையும் புறக்கணித்துவிட்டாராம்!