Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பழனி கோயிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா - உதயநிதி... பார்க்கத் திரண்ட 'பக்தர்கள்'!
பழனி: இது கதிர்வேலன் காதலி படத்தின் படப்பிடிப்புக்காக பழனி வந்த நயன்தாரா, மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் ஹீரோ உதயநிதியும் ஜோடியாகச் சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இது கதிரிவேலன் காதல்
திண்டுக்கல் அடுத்த பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கோம்பைபட்டியில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்' படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நயன்தாரா ஆசை
இதற்கிடையில் பழனி முருகனை தரிசிக்க வேண்டும் என தனக்கு நீண்ட நாட்களாக ஆசை என நயன்தாரா சொன்னதால், கோவில் நிர்வாகத்துக்கு முன்கூட்டியே சொல்லி சிறப்புத் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் படக்குழுவினர்.
உதயநிதி - நயன்தாரா ஜோடியாக...
நேற்று இரவு 7 மணிக்கு படப்பிடிப்பு குழுவினருடன் நடிகை நயன்தாரா, நடிகர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு ரோப்கார் மூலம் வந்தனர். பின்னர் அவர்கள் மலைக் கோவிலில் உள்ள ராஜ அலங்காரத்தில் இருந்த முருகப் பெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
படம் எடுக்க எதிர்ப்பு
உதயநிதி ஸ்டாலினை புகைப்படம் எடுப்பதற்கு அவருடன் வந்த உதவியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நயன்தாராவையும் எடுக்க விடவில்லை.
மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் திரண்டனர்
நடிகை நயன்தாரா வந்திருப்பது குறித்து அறிந்த 'பக்தர்கள்' முருக தரிசனத்துக்கு நின்ற க்யூவிலிருந்து ஓடிவந்து நயன்தாரா - உதயநிதி ஜோடியை தரிசிக்க திரண்டனர்.
இதை பார்த்த நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்து வேகமாக காரில் ஏறி ஓட்டலுக்குப் பறந்தனர்.