Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யானையை பார்த்து பயந்த நயன்தாரா.. தயங்கிய விக்னேஷ் சிவன்.. கடைசியில் செம காமெடி!
சென்னை : நடிகை நயன்தாரா யானையைப் பார்த்து பயந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் பற்றி தான் தற்போது டாக் ஆப் த டவுனாக உள்ளது.
ஜூன் 9ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகிலுள்ள ஒரு மடத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
கப்சிப்.. கழண்டு கொண்ட தோழி.. உயிரிழந்த சீரியல் நடிகை விவகாரத்தில் ஏகப்பட்ட பூகம்பங்கள் இருக்காம்!
குலதெய்வ கோவில்
இதையடுத்து, தஞ்சாவூர் அருகே உள்ள ஆற்றங்கரை காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நேற்று மதியம் வந்தனர். நயன்தாரா கோவில் பிரகாரத்தில் பொங்கல் வைத்தார். தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கருவறையில் இருந்த காமாட்சியம்மன், குப்பாயி, மகமாயி உள்ளிட்ட தெய்வங்களை இருவரும் வழிபட்டனர்.
ரசிகர்களுடன் செல்ஃபி
நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்து, கிராம மக்கள், இளைஞர்கள் கூட்டம் அதிகம் வந்திருந்தது. இரண்டு மணி நேரம், கோவிலில் இருந்த கிராம மக்களுடன் இருவரும் பேசினர். ரசிகர்கள், நடிகை நயன்தாராவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
யானையை பார்த்து பயந்த நயன்தாரா
தஞ்சாவூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு அவர்கள் சென்றனர். கோவிலில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த கோவில் யானையை வணங்கினர். அங்கிருந்தவர்கள் கோவில் யானைக்கு வாழைப்பழம் கொடுக்கும் படி கூறினர்.
டிராண்டாகும் வீடியோ
ஆனால், நயன்தாரா யானையை பார்த்து பயந்து , விக்னேஷ் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். விக்னேஷ் சிவனும் சிறிது தயக்கத்துடன் வாழைப்பழத்தை யானைக்கு கொடுத்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாவ் செம க்யூட் என வீடியோவை வைரலாக்கி வருகின்றர். சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ டிராண்டாகி வருகிறது.