Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஹனிமூனே போகல.. அதுக்குள்ள திருமணக் கொண்டாட்டம் ஓவர்.. படப்பிடிப்புக்குத் திரும்பும் நயன் !
சென்னை : நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி ஓரிரு நாளில் சென்னை திரும்பி படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
காதல் ஜோடியாக வலம் வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ந் தேதி கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நயன் , விக்கி திருமண நிகழ்ச்சியை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருப்பதால், திருமணத்தில் ஏராளமான கெடுபிடி இருந்தது. விக்னேஷ் சிவன் மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓரிரு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
தன்னுடைய பாணியிலிருந்து விலகுகிறாரா நெல்சன்.. காமெடி களத்திலிருந்து வன்முறைக்கு மாறியது ஏன்?
நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணம்தான் இன்னமும் பேசு பொருளாக உள்ளது. திருமணத்தை முடித்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம், செய்தியாளர் சந்திப்பு என புதுமண தம்பதிகள் மிகவும் பிஸியாக இருந்து வந்தனர். இதையடுத்து, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நயன்தராவின் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியதற்கான கேரளா சென்றனர்.
கேரளாவில் நயன்தாரா
நயன்தாராவின் அம்மா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் மகளின் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லையாம். இதனால்தான் திருமணத்தை முடித்த கையோடு விக்கியும் நயன்தாராவும் நேரடியாக தனது சொந்த ஊரான கேரள மாநிலம் திருவல்லாவுக்கு சென்று அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.
ஊழியர்களை மகிழ்ச்சி
மேலும்,கேரளாவில் நயன்தாராவிற்கு பிடித்த ரெஸ்டாரண்டுக்கு திடீரென கணவருடன் சென்று அங்கிருந்த ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதையடுத்து , ஆலப்புழாவில் உள்ள மிகவும் பழமையான செட்டிக்குளங்கரா கோயி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இருவரும் இன்னும் ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள் என்ற தகவல் வெளியாகி இருந்தன.
படப்பிடிப்பில் கவனம்
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி ஓரிரு நாளில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா, தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா அடுத்த வாரம் கலந்து கொள்ள இருப்பதாகவும் இதில் கலந்து கொள்வதற்காக கேரளாவிற்கு சென்ற நயன்தாரா நாளை மறுதினம் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.