Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதைப் பொருள் வழக்கு.. பிரபல நடிகர் அர்ஜுன் ராம்பால் காதலியின் தம்பி கைது.. பரபரக்கும் திரையுலகம்!
மும்பை: போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் காதலியின் தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பாலிவுட் பரபரப்பாகி இருக்கிறது.
சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், இந்த வழக்கில் நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மீது புகார் அளித்தார்.
வாடிவாசல் காளை ரெடியாகுது போல.. வெற்றிமாறன் படத்துக்காக நியூ கெட்டப்புக்கு மாறிய சூர்யா!
சி.பி.ஐ. விசாரணை
சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் புகார் கூறியிருந்தார். போலீசார் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது.
ரியா மீது வழக்கு
அப்போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பைகுலா சிறை
நடிகை ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி கைது செய்த போலீசார், பின்னர் ரியா சக்கரவர்த்தியையும் கைது செய்தனர். சுமார் ஒரு மாதமாக பைகுலா சிறையில் இருந்த ரியா, சில நாட்களுக்கு முன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சம்மன் அனுப்பி
இதற்கிடையே இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸ்
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் ராம்பாலின் பார்ட்னரான கேப்ரில்லா டிமெட்ரியாடிஸின் (Gabriella Demetriades) தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வெள்ளிகிழமை கைது செய்துள்ளனர்.
மேலும் விசாரணை
தென்னாப்பிரிக்க நாட்டின் குடியுரிமை பெற்றவரான அவர் வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.