Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போதைப் பொருள் விவகாரம்.. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை.. பரபரப்பு!
மும்பை: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பான விசாரணையில் பாலிவுட் சினிமாவில் போதை பொருள் புழக்கம் இருப்பது தெரிய வந்தது.
மறைந்த நடிகர் சுஷாந்தின் பண்ணை வீட்டில் அடிக்கடி போதை விருந்து நடைபெறும் என்றும் அண்மையில் தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி பாலிவுட்டில் போதை மருந்து இன்றி பார்ட்டியே நடக்காது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நடிகையிடம் விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி உட்பட பல முன்னணி நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று விசாரணை தொடங்கியுள்ளனர்.
ரகுல் ப்ரீத் சிங்
தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். சூர்யாவின் என்ஜிகே படத்திலும் நடித்துள்ளார். தற்போது சிவ கார்த்திகேயனின் அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
தீவிர விசாரணை
போதை பொருள் விவகாரம் தொடர்பாக தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என்று கூறி வந்த ரகுல் பிரீத் சிங், தனக்கு சம்மன் வந்துள்ளதாக நேற்று ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இன்று காலை நடிகை ரகுல் பிரீத் சிங் மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை விசாரணை
இதனிடையே தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாஷிடமும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இன்று விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரதா கபூர் ஆகியோரிடம் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.