Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
விடமாட்டாங்க போலிருக்கே.. அந்த விவகாரம்..பிரபல நடிகர் வீடுகளில் ரெய்டு.. விசாரணைக்கு ஆஜராக சம்மன்!
மும்பை: போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகரின் வீடுகளில் போலீசார் ரெய்டு நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுஷாந்த் சிங், தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பாலிவுட்டில் போதைப் பொருள் விவகாரம் பரபரப்பாகி இருக்கிறது.
சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, அவர் சகோதரர் சோவிக் உட்பட சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
பைகுலா சிறை
சுமார் ஒரு மாதமாக பைகுலா சிறையில் இருந்த நடிகை ரியா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
காதலி கேப்ரில்லா
இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் ராம்பாலின் காதலியான கேப்ரில்லா டிமெட்ரியாடிஸின் (Gabriella Demetriades) தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலாளர் கரிஷ்மா
கடந்த மாதம் 27 ஆம் தேதி தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாசின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1.8 கிராம் கஞ்சா உட்பட போதைப் பொருள்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இதனால் அவரை கடந்த மாதம் 28- ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
ஷபானா சயீத் கைது
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா மனைவி ஷபானா சயீத் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 10 கிராம் மாரிஜுவானா கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திடீர் சோதனை
இதற்கிடையே, நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான அந்தேரி, பாந்த்ரா, கர் பகுதிகளில் உள்ள வீடுகளில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவர் வீட்டில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதா என்பது பற்றி ஏதும் தெரியவில்லை. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.