Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
தீபிகா படுகோனே தான் அட்மினாம்.. போதைப் பொருள் வாட்ஸ்அப் சாட் தொடர்பாக வெளியான பரபரப்பு தகவல்
மும்பை: பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் நடைபெற்ற போதைப் பொருள் வாட்ஸ்அப் சாட் குழுவின் அட்மினே தீபிகா என்கிற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
நடிகை ரியா சக்கரவரத்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோருக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
போதைப் பொருள் விவகாரம்.. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை.. பரபரப்பு!
கோவா டு மும்பை
ஐபிஎல் போட்டிகளுக்கு சமீபத்தில் விளம்பரப் படம் நடித்துக் கொடுத்த நிலையில், அடுத்ததாக கணவர் ரன்வீர் சிங் உடன் இணைந்து கோவாவில் விளம்பர ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார் நடிகை தீபிகா படுகோனே. போதைப் பொருள் தடுப்புப் பிரிவான என்சிபி சம்மன் அனுப்பிய நிலையில், கோவாவில் இருந்து மும்பை வந்தார் தீபிகா படுகோனே.
நாளை ஆஜர்
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிக்கிய வாட்ஸ்அப் சாட்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு தொடர்பு இருப்பதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், என்சிபி அனுப்பிய சம்மனை ஏற்று நாளை விசாரணைக்கு தீபிகா ஆஜராக உள்ளார்.
விசாரணை
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் இது தொடர்பான வழக்கில் இன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், நடிகைகள் சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூரிடமும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. தீபிகா படுகோனேவின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபிகா தான் அட்மினாம்
பாலிவுட் நடிகைகள் மற்றும் நடிகர்கள் இடம்பெற்றுள்ள போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ்அப் க்ரூப்புக்கு நடிகை தீபிகா படுகோனே தான் அட்மின் என்ற அதிர்ச்சியான தகவலை தற்போது என்சிபி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். நாளை தீபிகாவிடம் கடும் விசாரணை நடத்தப்படும் என்பது இதன் மூலமாக தெரிகிறது.
கரண் ஜோஹரின் போதை பார்ட்டி
மேலும், கடந்த 2019ல் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்திய போதை விருந்து குறித்த ஆதாரங்களும் சிக்கி உள்ளதாகவும், அதில் பங்கேற்ற தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், மலைகா அரோரா, விக்கி கவுசல், ஷாகித் கபூர் உள்ளிட்டோரையும் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.