Don't Miss!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மேலும் 2 நடிகைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விவகாரம் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலிவுட்டிலும் கன்னட சினிமா துறையிலும் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
'அங்காடித் தெரு' சிந்துவுக்கு புற்றுநோய்.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்..உதவி கேட்டு உருக்கம்!
தூக்குப் போட்டு
நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை ரியா சக்கரவர்த்தி மீது புகார் அளித்தார்.
ரியா சக்கரவர்த்தி
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நடிகை ரியா கைது
பின்னர், அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிராண்டா உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாரா அலி கான்
இந்நிலையில் நடிகை ரியா சக்கரவர்த்தி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சில நடிகர், நடிகைகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஷ்ரத்தா கபூர், தமிழில் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் நடித்திருந்தார். சாரா அலிகான், பிரபல நடிகர் சைஃப் அலிகானின் மகள்.
அட்ரங்கி ரே
அவர், தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் அட்ரங்கி ரே என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் போதைப் பொருள் தடுப்புப் படையினர் சம்மன் அனுப்ப உள்ளனர். இதை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதைத் தாண்டி நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஃபேஷன் டிஸைனர் சைமன் கம்பட்டா ஆகியோரிடமும் அடுத்த வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!