Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
போலீஸ்கிரியே ரவிக்குமாரின் கடைசி இந்தி படமாக இருக்கட்டும்: என்டிடிவி மூவீஸ்
மும்பை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய முதல் இந்தி படமான போலீஸ்கிரி இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
இயக்குனர் ஹரி எடுத்த சாமி படத்தை இந்தியில் கே.எஸ். ரவிக்குமார் போலீஸ்கிரி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும், த்ரிஷா கதாபாத்திரத்தில் பிராச்சி தேசாயும், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வேடத்தில் பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர்.
ரவிக்குமார் இயக்கிய முதல் இந்தி படமான போலீஸ்கிரி இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படம் குறித்து என்.டி.டி.வி. விமர்சனம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்,
பிரபல தமிழ் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் முதல் இந்தி படம் போலீஸ்கிரி. இதுவே கடைசிப் படமாக இருப்பது நல்லது. படம் எடுக்க மும்பையில் ஏற்கனவே நிறைய திறமைசாலிகள் உள்ளனர். போலீஸ்கிரி ஓவர் சத்தமாக உள்ளது. நடிகர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு உரத்த குரலில் பேசியுள்ளனர். பின்னணி இசை காதில் பஞ்சை வைத்து அடைத்தாலும் அதையும் தாண்டிக் கொண்டு செல்லும் அளவுக்கு உள்ளது. கதையே ஒரே சத்தமும், கோபமுமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சஞ்சய் தத் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன்பு நடித்த போலீஸ்கிரிக்கு என்.டி.டி.வி. மூவீஸ் 5க்கு 1 மதிப்பெண் அளித்துள்ளது.
கே.எஸ்.ரவிக்குமாருக்கு 1 மார்க் தான் என்றால், தற்போது பாலிவுட்டில் உள்ள இயக்குனர்களில் சிலரின் படங்களுக்கு பூஜ்ஜியம் தான் மதிப்பெண்ணாக அளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.