ஆரம்பத்தில் பத்து.. அப்புறம் முப்பது... கேரளாவில் நெடுஞ்சாலைக்கு கிடைத்த வெற்றி!
தமிழில் சமீபத்தில் வெளியான நெடுஞ்சாலை படத்துக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
ஆரி, ஷிவதா நடித்து கிருஷ்ணா இயக்கத்தில் தமிழில் வெளியான படம் நெடுஞ்சாலை. படத்துக்கு நல்ல விமர்சனங்கள்க கிடைத்தன.
இந்தப் படம் சமீபத்தில் கேரளாவில் ரிலீஸானது.
ஆரம்பத்தில் பத்து தியேட்டர்களில் மட்டும்தான் திரையிட்டிருக்கிறார்கள். படம் நன்றாக இருப்பதாக செய்தி பரவ, சட்டென்று பிக்கப்பாகிவிட்டது படம்.
ரசிகர்களின் அமோக வரவேற்பால் இப்போது முப்பது தியேட்டர்களில் திரையிடவிருக்கிறார்களாம் நெடுஞ்சாலையை.
இதுகுறித்து இயக்குநர் கிருஷ்ணா கூறுகையில், "இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு அடுத்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்ற பாதையை போட்டுக்கு கொடுத்திருக்கிறது," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications
