Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நீலம் பண்பாட்டு மையத்தின் மார்கழியில் மக்களிசை.. சென்னை ஐஐடியில் 4வது நாள் கொண்டாட்டம்!
சென்னை: நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசையின் நான்காவது நாள் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் கோலாகலமாக நடைபெற்றது.
இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி கடந்த 23 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.
இந்நிலையில் நான்காவது நாள் நிகழ்ச்சி பெரும் மக்கள் கொண்டாட்டத்துடன் சென்னை ஐஐடியில் பறையிசை மற்றும் ஒப்பாரி பாடலுடன் தொடங்கியது.
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் , இயக்குனர் அதியன் ஆதிரை ,தோழர் திருமுருகன் காந்தி, தோழர் செல்வா மற்றும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் ஆகியோர் கலந்துக் கொண்டு மக்களோடு மக்களிசையை கொண்டாடினர்.
நடிகை அமலா சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் கணம்...டீசர் அப்டேட் வெளியானது.!
மேலும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் அவர்கள் "உலக இசையில் பறையிசை மிக முக்கியமானது மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் எழுச்சிக்கான ஒரு மாபெரும் முயற்சியை எடுத்துள்ளார்" என்று நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார். பின்பு பேசிய இயக்குனர் அதியன் ஆதிரை "கிராமப்புற வாழ்வியலை மக்களிசையோடு தொடர்ப்பு படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றது" என்று வாழ்த்து கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட செல்வா அவர்கள் "உரிமைக்கான முழக்கம் இந்த பண்பாட்டு தளத்தில் ஒலிக்கிறது" என்று மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் இசைக் கலைஞர்களை பற்றி "நாம் எழுத வேண்டும் என்றும் இம்மக்களிசையை நாம் மிகவும் முக்கியமாக ஆவண படுத்த வேண்டும் என்றார்.
Recommended Video
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் விருது கொடுத்து கௌரவித்தனர். இதனை தொடர்ந்து மார்கழியில் மக்களிசையின் ஐந்தாவது நாளாக மீண்டும் சென்னை ஐஐடி-யில் இன்று நடைப்பெற உள்ளது.