Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரு புறம் தயாரிப்பு.. மறுபுறம் நடிப்பு.. அசத்தும் நீலிமா ராணி
சென்னை : நீலிமா ராணி பிரபல நடிகை ,தயாரிப்பாளர்,டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் தொகுப்பாளர்.
நீலிமாவை நாம் பல நாடகங்களில் பார்த்து இருப்போம் மற்றும் பல படங்களிலும் பார்த்து இருப்போம் .இவர் பல நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்து இருக்கிறார் .மேலும் ஒரு படம் மற்றும் ஒரு ஜி தமிழ் நாடகத்தை தயாரித்து இருக்கிறார் .
இப்படி பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து அசத்தி வரும் நீலிமா ராணி சிறுவயதில் இருந்து சினிமாத்துறைக்காக பணியாற்றி வருகிறார் .நீலிமா குழந்தை யாக பள்ளியில் பயிலும் போது விடுமுறையின் போது பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.
நீலிமா தேவர்மகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .அதற்கு பின் பாண்டவர் பூமி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பின்னர் தெலுங்கு மளையளம் மற்றும் தமிழ் என்று தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார்.
அதற்கு பின் நாடகங்களிலும் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்த பின் தமிழ் படங்கள் மற்றும் நாடங்களிலே தொடர்ந்து நடித்து வந்தார் .இவரின் பெரிய வெற்றி பெற்ற நாடங்களில் ஒன்று திருமுருகனின் மெட்டி ஒலி நாடகம் ,அதில் நீலிமா கிட்டதட்ட 850 எபிஸோடுகள் நடித்து இருப்பார் .நாடகத்தின் ஆரம்பம் முதல் இருதி வரை நடித்திருந்தார் என்றே கூறலாம் .
இவருக்கு சுசீந்திரனின் நான் மகான் அல்ல படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .அதை சரியாக பயன்படுத்தி கொண்ட நீலிமா நன்கு நடித்து சிறந்த துனை நடிகைகான எடிசன் விருதினை வென்றார் .கடைசியாக நீலிமா பரியேரும் பெருமாள் கதிருடன் சத்ரு படத்தில் நடித்து இருந்தார்.
கொஞ்ச நாட்களுக்கு முன் நடிப்பில் இருந்து அடுத்த பரிமானம் சென்றிருக்கிறார் நீலிமா .இவர் கே.எஸ் அதியமானின் அமலி துமலி என்ற காமெடி படத்தை தயாரித்து இருந்தார் .மேலும் தற்போது ஜி தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் நிறம் மாறாத பூக்கள் என்ற நெடுந்தொடரையும் தயாரித்து வருகிறார்.
தற்போது ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நீலிமா தனது செயல்களையும் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.சமீபத்தில் தனியார் ஊடகம் நடத்திய ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நீலிமா பாடகர் மற்றும் இயக்குனர் அருன்ராஜா காமராஜுவுக்கு விருது வழங்கினார்.
கடைசியாக தமிழில் அரன்மனை கிளி நாடகத்தில் நடித்து இருந்த நீலிமா நீண்ட வருடங்களுக்கு பிறகு மளையாள நாடகமான சக்கொயும் மரியும் எனும் நாடகத்தில் நடித்து வருகிறார்.