Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரிவாளைப் பார்த்து பயந்தேன்… நீலிமாவின் அனுபவங்கள்
சின்னத்திரை, சினிமா என கலந்து கட்டி நடிக்கும் நீலிமா ராணி சென்னை கோடம்பாக்கத்தில் சினிமா வாசத்தோடு பிறந்து வளர்ந்தவர்.நம்பர் 6 அஜீஸ்நகர் 2 வது தெரு கோடம்பாக்கத்தில் சிறுவயதில் இருந்தே குடியிருக்கிறாராம். 6 வயதில் தொடங்கிய சினிமா பயணம் சின்னத்திரை, பெரியதிரை என நிறைவாகப் போய்க் கொண்டிருக்கிறது.
அரிவாளைப் பார்த்து அழுதேன்
'தேவர் மகன்' படத்தில் நாசரின் மகளாக நடிக்கும் போது நீலிமாவுக்கு 6 வயதாம். கமல்ஹாசன் குட்டிப்பொண்ணாக இருந்த நீலிமாவின் கழுத்தில் அரிவாளை வைத்த உடன் பயந்து அழுதாராம். "உன்னை வெட்ட மாட்டேன் இதெல்லாம் வெறும் நடிப்புதான்" என்று கமல் ஆறுதல் சொன்ன பிறகும் நீலிமாவிற்கு பயம் போகவில்லையாம்.
சின்னத்திரையில் ஹிட் சீரியல்கள்
சினிமா, சின்னத்திரைனு இரண்டிலும் தொடர்ந்து நடித்தாலும் 'மெட்டி ஒலி' சீரியல்தான் தனக்கு பேர் வாங்கித் தந்தது என்கிறார் நீலிமா. அதுக்கு அப்புறம் கோலங்கள், இதயம், தென்றல், செல்லமே என பேர் சொல்லும் ஹிட் சீரியல்கள்ல வாய்ப்பு கிடைத்தனவாம்.
மிதிவெடியில் ஈழத்துப் பெண்
பெரிய திரையில் திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தனவாம் நீலிமாவுக்கு. ஈழத்தமிழர்கள் கண்ணிவெடிகளால் எப்படி பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மிதிவெடி திரைப்படம் இவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்கிறார். ஈழத்தில் உள்ள பெண்கள் படும் துயரங்களை உணர்ந்து நடித்தாராம் நீலிமா.
நம்ப வச்சு ஏமாத்திட்டாங்களே
காதல் பாதை என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவர் என்று கூறிதான் புக் செய்தார்களாம். ஆனால் சரியாக இரண்டு மூன்று சீன்களில் கூட காட்டாமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று வருத்தப்படுகிறார் நீலிமா. இனி பெரிய திரையுலக புரடியூசர்கள், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்... என்று அட்வைஸ் வேறு செய்கிறார் நீலிமா.
ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம்
நீலிமாவுக்கு ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாம்!
தொடர்ச்சியான தியானங்களால என் மனசு ரொம்ப பக்குவப்பட்ட நிலைக்கு வந்துடுச்சு. அப்பா இறந்தப்ப, தனியாளா இருந்து அவரோட இறுதி சடங்குகளை முடிக்கிற பக்குவத்தை எனக்குத் தந்ததும் அந்த பயிற்சிதான்'' என்கிறார்.
ஆளை மாற்றிய கணவர்
நீலிமாவின் கணவரும் சினிமாத்துறையை சார்ந்தவர்தானாம். இயக்குனர் கே.எஸ்.அதியமானிடம் உதவி இயக்குநராக இருக்கும் இசைவாணன்தான் என்னோட பெட்டர் ஹாஃப் என்கிறார் நீலிமா. பாலிவுட் ஹீரோ மாதிரி பயங்கர ஸ்மார்ட்டா இருப்பார். அவரைப் பார்த்துதான் நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்''னு வார்த்தைக்கு வார்த்தை கணவர் புகழ் பாடுகிறார்.