Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அப்பா, அம்மாவால் கார், நகை, வீடு கொடுக்க முடியும், கேட்கிறேன்: நீயா நானாவில் பெண் அதிரடி
சென்னை: பெற்றோரால் கொடுக்க முடியும் என்பதால் கார், வீடு, நகைகள் கேட்கிறோம் என பெண்கள் நீயா நானா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர்.
கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்ட பெண்கள் திருமணத்திற்கு தங்கள் பெற்றோரிடம் இருந்து 50 பவுன் நகை, வீடு, கார், ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வந்து இறங்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதை நீங்களே படித்துப் பாருங்க.
பெண்
100 ஆண்டுகளாக ஆண்கள் வரதட்சணை என்ற பெயரில் கார், பைக், வீடு, சொம்பு, பாத்திரம் வேண்டும் என்று ஒரு பெண்ணின் பெற்றோரின் ரத்தத்தை குடிக்கும்போது பெண்கள் தங்கள் பெற்றோரிடம் கேட்பது தவறா என்றார் ஒரு பெண்.
கீழ்த்தரம்
பெண்கள் தங்கள் பெற்றோரிடம் நகை, பணம் கேட்பது தவறு இல்லை. ஒரு மணிநேர நிகழ்ச்சியில் ஒரு பெண் கேட்டால் ஏன் இவ்வளவு வக்கிரத்தை கொட்டுறீங்க. 5 சவரன் நகை போட முடியாமல் என் தமிழ்நாட்டு பெண்கள் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் வேலை பார்க்கிறார்கள்.
வரதட்சணை
ஆண்கள் வரதட்சணை வாங்குவது தான் மேஜர். முதலில் அதை சரி பண்ணுங்க அதைவிட்டு எதுக்கு பெண்கள் மீது குதிக்கிறீங்க? முதலில் உங்க வீட்டை சுத்தம் செய்ங்க.
பைக் ஷோ
நீயா நானாவில் ஃபேன்சி பைக் வாங்குவது குறித்து நடந்த ஷோ பற்றி யாருமே குதிக்கவில்லை. ஆனால் பெண்கள் கேட்டால் மட்டும் ஆளாளுக்கு குதிக்கிறாங்க என்றார் மற்றொரு பெண்.
மீம்ஸ் கிரியேட்டர்
பெண்கள் தங்கள் பெற்றோரிடம் கேட்பது குறித்து தேவையில்லாமல் மீம்ஸ் போடுகிறீர்கள் என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் மீது குற்றம்சாட்டினர் பெண்கள்.
முடியும்
எங்க அப்பா, அம்மாவால முடியும் அதனால் அவர்களிடம் கேட்கிறேன். பெண்கள் எல்லாத்தையும் யோசிச்சு தான் கேட்போம். ஹய், நான் மீம்ஸில் வந்துட்டேனா என்று ஜாலியாக எடுத்துக்கிற பொண்ணு தான். ஆனால் போகப் போக ஆளாளுக்கு என்னை கேள்வி கேட்டானுங்க.