Don't Miss!
- News தலைநிமிருது தருமபுரி.. அங்கே மலை உச்சியில் யாரு? கலெக்டர் சாந்தி? தர்மபுரி மலை கிராமம் குஷி.. சபாஷ்
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை: உண்மையை போட்டுடைத்த நடிகர்
மும்பை: நடிகையும், மாடலுமான நேஹா தூபியா கர்ப்பமானதால் தான் அவசர அவசரமாக திருமணம் நடந்தது என்று அவரின் கணவரும், நடிகருமான அங்கத் பேடி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அங்கத் பேடிக்கும், நடிகை நேஹா தூபியாவுக்கும் கடந்த மே மாதம் 10ம் தேதி டெல்லியில் உள்ள குருத்வாராவில் வைத்து திடீர் திருமணம் நடந்தது.
நேஹா கர்ப்பமானதால் தான் இந்த திடீர் திருமணம் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் அதை நேஹா மறுத்தார். இந்நிலையில் நேஹா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கத் பேடி கூறியதாவது,
கர்ப்பம்
திருமணத்திற்கு முன்பே நேஹா கர்ப்பமாகிவிட்டார். அதனால் தான் 4 நாட்களில் அவசர, அவசரமாக ஏற்பாடு செய்து எங்களின் திருமணம் நடந்தது. நேஹாவின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரை சந்தித்து அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நான் தான் தெரிவித்தேன். திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான விஷயத்தை பெற்றோரிடம் சொல்ல அவர் பயந்தார்.
அதிர்ச்சி
நான் கர்ப்ப விஷயத்தை கூற நேஹாவின் வீட்டிற்கு சென்றேன். அவரின் பெற்றோர் என்னை வரவேற்று உணவு, இனிப்பு எல்லாம் கொடுத்தார்கள். சாப்பிட்ட பிறகு பீர் குடித்து முடித்துவிட்டு நேஹாவின் கர்ப்ப செய்தியை அவர்களிடம் கூறினேன். நான் கூறியதை கேட்டு அவர்கள் இருவரும் அப்படியே அமைதியாகிவிட்டனர்.
அம்மா
சிறிது நேரம் அமைதியாக இருந்த நேஹாவின் பெற்றோர் பின்னர் என்னை திட்டத் துவங்கிவிட்டனர். திருமணத்திற்கு முன்பு இப்படியா செய்வது என்று என்னை விளாசினார்கள். நேஹாவின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார். திடீர் என்று அவர் மூக்கில் இருந்து ரத்தம் வரத் துவங்கிவிட்டது. அதை பார்த்து நான் பயந்துவிட்டேன்.
பயம்
நேஹாவின் பெற்றோரிடம் உண்மை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் சொன்னேன். திடீர் என்று திருமணம் நடந்ததால் என் நண்பர்கள் பலரால் வர முடியவில்லை. அவர்கள் எல்லாம் என் மீது கோபப்பட்டனர். நான் நேஹாவை காதலித்தேன், அவரை திருமணம் செய்ய விரும்பினேன் என்றார் அங்கத் பேடி.