Don't Miss!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- News மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
லோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா?
விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி நெல்லையில் ஒருவர் வாக்களித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நெல்லையைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்துள்ளார்.
விஜய் நடிப்பில் A .R முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் வெற்றியையும் , வசூல் சாதனையும் படைத்த படம். இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 P தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் வாக்களித்தனர். தமிழகத்தில் மொத்தல் 71 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது.
இயந்திரக் கோளாறு
ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு தாமதமானது. சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்ற புகாரும் எழுந்தது.
கள்ள ஓட்டு பிரச்சினை
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடியில் அமைப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மணிகண்டன் என்பவருடைய ஓட்டை மற்றறொருவர் கள்ள ஒட்டு போட்டதாக புகார் எழுந்தது. தன்னுடைய ஓட்டை மற்றொருவர் எப்படி போடலாம் என மணிகண்டன் தட்டிக்கேட்டார்.
சர்கார் பாணியில்
இதையடுத்து, ,மணிகண்டனுக்கு 49 P தேத்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவர் தனது உரிமையை நிலைநாட்டினார். இது சர்கார் படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று விஜய் ரசிகர்கள் பெருமையாக பதிவிட்டு வருகின்றனர்.