செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ஒடிடியில் ரிலீஸ்… எப்போ தெரியுமா ?
சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளது.
Recommended Video
எஸ்.ஜே. சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் வெளியான இத்திரைப்படம் ஜீ5 ஒடிடி தளத்தில் மே14ந் தேதி வெளியாக உள்ளது.

திரையரங்கில் வெளியானது
தமிழ் சினிமாவில் பேய்கள் பற்றி திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்த காலத்தில் எடுப்பட்டத் திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி செல்வராகவனின் பிறந்த நாள் அன்று திரையரங்கில் வெளியானது.

பழிவாங்கும் பேய்
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா மிகப் பெரிய பணக்காரர், அவனுடைய மனைவியாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இவர்களுடயை குழந்தை ரிஷியை பார்த்துக்கொள்கிறார் ரெஜினா. இளம்பெண்ணான ரெஜினாவை பாலியல் வல்லுறவு செய்து கொன்று விடுகிறான் எஸ்.ஜே.சூர்யா இதுதான் படத்தின் கதை.

மே 14ந் தேதி ரிலீஸ்
தன்னை துன்புறுத்திக் கொன்றவனை தூக்கிப்போட்டு மித்து பழிவாங்குகிறது என்பதை இயக்குனர் செல்வராகவன் அழகாக படமாக்கி உள்ளார். கடந்த மாதம் வெளியான இந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஜீ5 ஒடிடியில் மே 14ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

பாடலுக்கு நல்ல வரவேற்பு
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேன் ஆர்ட்டிஸ்ட் மோஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவற்பை பெற்றன.


Click it and Unblock the Notifications











