Don't Miss!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கவிஞர் வைரமுத்துவை நலம் விசாரித்தார் நடிகர் நெப்போலியன்
சென்னை: கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் நடிகர் நெப்போலியன்.
நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் கடந்த ஆறு மாதங்களாக குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார்.
சில தினங்களுக்கு முன்புதான் அவர் சென்னை திரும்பினார். மீண்டும் படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ள அவர் தனக்குப் பொருத்தமான கதைகளைக் கேட்டு வருகிறார்.
அவர் வந்திருப்பது தெரிந்ததும் பல பட அதிபர்களும் நெப்போலியனைச் சந்தித்து கதை சொல்ல நேரம் கேட்டு வருகின்றனர்.
ஆனால் அவர் அதை சில தினங்கள் தள்ளி வைத்துவிட்டு, தனது நண்பர்களைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகிறார்.
நேற்று முன்தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் நெப்போலியன் ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் மாந்துறை ஜெயராமன், மன்றத் தலைவர் கவுரி சங்கர், மாநில துணைத் தலைவர் ஏ ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
நேற்று கவிஞர் வைரமுத்து வீட்டுக்குச் சென்று அவரை நலம் விசாரித்தார். முதுகு தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சை செய்து, இப்போது ஓய்வெடுத்து வருகிறார் வைரமுத்து.