கவிஞர் வைரமுத்துவை நலம் விசாரித்தார் நடிகர் நெப்போலியன்
சென்னை: கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் நடிகர் நெப்போலியன்.
நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் கடந்த ஆறு மாதங்களாக குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார்.

சில தினங்களுக்கு முன்புதான் அவர் சென்னை திரும்பினார். மீண்டும் படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ள அவர் தனக்குப் பொருத்தமான கதைகளைக் கேட்டு வருகிறார்.
அவர் வந்திருப்பது தெரிந்ததும் பல பட அதிபர்களும் நெப்போலியனைச் சந்தித்து கதை சொல்ல நேரம் கேட்டு வருகின்றனர்.
ஆனால் அவர் அதை சில தினங்கள் தள்ளி வைத்துவிட்டு, தனது நண்பர்களைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகிறார்.
நேற்று முன்தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் நெப்போலியன் ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் மாந்துறை ஜெயராமன், மன்றத் தலைவர் கவுரி சங்கர், மாநில துணைத் தலைவர் ஏ ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
நேற்று கவிஞர் வைரமுத்து வீட்டுக்குச் சென்று அவரை நலம் விசாரித்தார். முதுகு தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சை செய்து, இப்போது ஓய்வெடுத்து வருகிறார் வைரமுத்து.


Click it and Unblock the Notifications











