Don't Miss!
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
பாலிவுட்டில் நெபோட்டிசம் என்பது அபத்தமான குற்றச்சாட்டு.. வரிந்து கட்டிய நடிகை வனிதா!
சென்னை: பாலிவுட்டில் நெபோட்டிசம் என்பது அபத்தமான குற்றச்சாட்டு என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு நெபோட்டிசம் என்ற வார்த்தை பரிட்சயமான வார்த்தையாக மாறிவிட்டது.
பாலிவுட்டில் இருந்த நெபோட்டிசமே சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
என்ன லிஸ்ட் பெருசா போகுது.. சுஷாந்த் சிங்கும் சாராவும் அப்படி காதலிச்சாங்க.. போட்டுடைத்த நண்பன்!
பெரும் பரபரப்பு
சினிமா பிரபலங்கள் பலரும் இந்தி சினிமாவில் நெபோடிசம் இருப்பதாக குற்றம்சாட்டினர். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பலரும் மற்ற மொழிக்காரர்களுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அபத்தமான குற்றம்
இந்நிலையில் நடிகை வனிதா விஜயக்குமார் பாலிவுட்டில் உள்ள நெபோட்டிசம் குறித்தும் சைபர் புல்லிங் குறித்து தனது டிவிட்டர் பக்கதில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.#nepotisminbollywood என்பது மிகவும் அபத்தமான குற்றம் சொல்லும் விளையாட்டு..
கவனத்தை பெறுவதற்கு..
மற்ற பிரபலங்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதன் மூலம் கவனத்தைத் தேடுவது தீவிரமாகிவிட்டது. திறமையானவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. சைபர் புல்லிங் என்பது மற்றொரு நிலைக்குச் செல்கிறது என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி
மேலும் மற்றொரு பதிவில் சைபர் புல்லிங் குறித்து பிரதமர் மோடிக்கும் டேக் செய்துள்ளார் நடிகை வனிதா. அதில், சைபர் புல்லிங்கை இந்தியாவில் முன்னுரிமையான குற்றமாக மாற்றுங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் வாடிக்கையாளர்களின் தகவல்களை சரிபார்த்த பிறகு சமூக ஊடக கையாளுதல்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.
கடுமையான தண்டனைகள்
சோஷியல் மீடியா கணக்குகள் வங்கிக் கணக்குகளைப் போன்று ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். இணைய சட்டங்களை மீறினால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். மக்கள் பைத்தியம் பிடித்திருக்கிறார்கள்.. அதிகளவு நெகட்டிவிட்டி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஊருக்கு உபதேசமா?
வனிதாவின் இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள், வனிதா அக்கா ஆன் ஃபயர் என்றும், ஊருக்கு மட்டும்தான் உபதேசமா என்றும் கேட்டு விளாசியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், ரேஷன் கார்டு, டிகிரி சர்டிஃபிகேட், பிறப்பு சான்றிதழ் மற்றும் விசிட்டிங் கார்டுகளை கூட இணைத்து விடலாம் என நக்கல் அடித்துள்ளனர்.
-
நயன்தாரா ஆடுனா மட்டும் பார்க்கிறாங்க.. இவங்களையும் பார்க்கட்டும்.. லாரன்ஸ் அதிரடி பேச்சு
-
அரசியல் என்ட்ரி.. என்ன ரஜினியை இப்படி கலாய்ச்சிட்டாரு விஷால்?.. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளிப்பு
-
CWC 5: குக்கர் சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. விரைவில் பிரம்மாண்டமாக துவங்கும் குக் வித் கோமாளி 5!