Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நேர்கொண்ட பார்வையில் நடித்த அஜீத் ஒரு சூப்பர் ஸ்டார் - திரிஷா
Recommended Video
சென்னை: அஜித் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, யுனிசெஃப்பின் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற 'குழந்தைகளுக்கு எதிரான வன்முறை' குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட திரிஷா மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
சினிமாவை நிஜ வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும், அரபு நாடுகளில் இருக்கும் உடனடி கடுமையான தண்டனையை போல இங்கேயும் கொண்டு வரவேண்டும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் லட்சியத்திற்காக போரடினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றார்.
2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் பல ஆயிரம் பதிவாகியுள்ளது. தேசிய குற்றப்பிரிவு ஆவண புள்ளிவிபரத்தின் படி 2014ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000 , 2015 ஆம் ஆண்டில் இது 15000 வழக்குகள் , 2016ஆம் ஆண்டில் அது 36000 வழக்குகளாக இருமடங்காகிவிட்டது .
குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள் எல்லாமே குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் நம்பிக்கைக்கு உரிய நபர்களால் செய்யப்படுகின்றது என்றும் திரிஷா கூறினார்.
மாணவிகளிடம் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிஷா, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்து வந்தாலும் , இது போதாது. எனவே இதற்கான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். கிராமப்புற பெண்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது இது தொடர வேண்டும் என்றும் கூறினார்.
அஜீத்தின் நேர் கொண்ட பார்வை படம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதுதான். அதைப்பற்றி பேசிய திரிஷா, நான் வெளிநாட்டில் இருந்ததால் நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க முடியவில்லை. அஜித் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.