Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நேர்முகம்... கேரளா காட்டுக்குள் காணாமல் போகும் ஏழு ஜோடிகளின் சஸ்பென்ஸ் த்ரில்லர்!
ஹைடெக் தயாரிப்பில் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் ரஃபி- மீனாட்சி நடிக்கும் நேர் முகம்.
கேரளாவின் அடர்த்தியான காட்டுக்குள் செல்லும் ஏழு ஜோடிகள் மீண்டும் திரும்பினார்களா என்பதை வெகு விறுவிறுப்பாகவும், த்ரில்லரையும் கலந்து கட்டி சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் முரளி கிருஷ்ணா.
‘மிரண்டவன்' படத்தை அடுத்து முரளிகிருஷ்ணா இயக்கும் படம் இது. ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கருப்பசாமி குத்தகைதாரர்', ‘அகம் புறம்' ஆகிய படங்களின் நாயகி மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹைடெக் பிக்சர்ஸ் சார்பாக ரஃபி தயாரிக்கிறார். நேர்முகத்தில் ஏழு ஜோடிகள் காட்டுக்குள் படும் பாட்டை வித்தியாசமான முறையில் படமாக்கியுள்ளார். படத்தில் பாண்டியராஜன், ஜின்னா, சிசர் மனோகர், நெல்லை சிவா மற்றும் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் முரளி கிருஷ்ணா கூறுகையில், "எப்போதுமே எனது படங்களில் மனப் பிரச்சினைகளை மையப்படுத்தி கதை பயணப்படும்.
‘நேர்முகம்' படத்திலும் மனிதர்களுக்குள்ளேயும் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படும் விஷயங்களையும் அலசிவிட்டு தீர்வுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்பவர்கள் எவ்வகையான முடிவுக்கு உட்படுத்தபடுகிறார்கள் என்பதை காதல், செண்டிமெண்ட், த்ரில்லர், ஆக்ஷன், கிளாமர் கலந்து மகா கமர்சியல் கலவையாக வடிவமைத்துள்ளேன்.
இளைஞர்களையும், காதலர்களையும் டார்கெட் வைத்து உருவாக்கப்படும் இப்படம் குடும்பங்களையும் சுண்டி இழுக்கும் மெசேஜுடன் கிளைமாக்ஸைத் தொடும். இசைக்கு என் படங்களில் எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். இப்படத்தில் நான்கு பாடல்கள் எழுதி நானே இசையமைத்துள்ளேன். துள்ளும் இசையைக் கேட்கலாம். படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார்.
'நேர்முகம்' படத்தின் ஒளிப்பதிவை ஜெகதீஷ் வி. விஸ்வம் கவனிக்க, எடிட்டிங்கை வில்சியும், தயாரிப்பு நிர்வாகத்தை தேனி எஸ் முருகன் கவனிக்க படம் சென்னையில் தொடங்கி, கேரளா, கோவா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் வளர இருக்கிறது," என்றார்.