Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நேசமணி ஆப்பு வைத்தது 'அவருக்கு' மட்டும் அல்ல 'இவருக்கும்' தான்
Recommended Video
சென்னை: நேற்று ஒரே நாளில் நேசமணி இரண்டு பேருக்கு ஆப்பு வைத்துவிட்டார்.
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் ட்விட்டரில் மோடியை கான்டிராக்டர் நேசமணி தோற்கடித்துவிட்டார்.
பாகுபலி படத்தில் பல்லா பதவியேற்றபோது மக்கள் பாகுபலியின் பெயரைச் சொல்லி அசிங்கப்படுத்திய காட்சியை வைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்தனர். நாள் முழுவதும் உலக அளவில் நேசமணி டிரெண்டாகி மோடியின் பதவியேற்பு ட்வீட்டுகளை இருட்டடிப்பு செய்துவிட்டார்.
நேசமணி
உயிரே இல்லாத நேசமணியால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோடிக்கு ட்விட்டரில் தோல்வி ஏற்பட்டது. நேற்று மோடிக்கு மட்டும் அல்ல நந்த கோபாலன் குமரனுக்கும் ட்விட்டரில் சிக்கல் ஏற்பட்டது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்.ஜி.கே. படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
|
என்.ஜி.கே.
நேற்று என்.ஜி.கே. படம் குறித்து போடப்பட்ட ட்வீட்டுகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம் நம் கான்டிராக்டர் நேசமணி. சூர்யா ரசிகர்கள் ரூ. 6 லட்சம் செலவு செய்து திருத்தணியில் 215 அடியில் வைத்த கட்அவுட்டையும் நேசமணியை வைத்து நாசமாக்கிவிட்டனர். நேற்று என்.ஜி.கே. பற்றி பேச்சு எழுந்தது. அது எதற்கு என்றால் நேசமணியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான சந்துரு தன் பெயர் நந்த கோபாலன் குமரன் என்றும், நேசமணி யார் என்றே தெரியாது என்றும் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர். மேலும் என்.ஜி.கே. படத்தில் சூர்யாவை தூக்கிச் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு நேசமணி வழக்கில் சந்துரு கைது என்று பிரேக்கிங் நியூஸ் எல்லாம் போட்டார்கள்.
கான்டிராக்டர்
என்.ஜி.கே. படத்திற்கு விளம்பரம் தேட முடியாத அளவுக்கு நேசமணி ட்விட்டரை ஆக்கிரமித்துக் கொண்டார். அதிக ட்வீட் போட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் கில்லாடிகளான சூர்யா ரசிகர்களாலேயே நேசமணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்படியோ தன் தலையில் சுத்தியல் விழுந்த வழக்கில் தப்பித்த சந்துருவுக்கு நேசமணி நேற்று நல்ல பரிசு கொடுத்துவிட்டார்.
தமிழ் ராக்கர்ஸ்
என்.ஜி.கே. படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் ஒரு மாதிரியாகவும், மற்றவர்கள் வேறு மாதிரியாகவும் பேசிக் கொள்கிறார்கள். இதற்கிடையே இந்த தமிழ் ராக்கர்ஸ் படம் ரிலீஸான சூடோடு அதை கசியவிட்டுவிடுமோ என்ற கவலையில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள்.