Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதலில் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.. அதைப்பற்றி அப்புறம் பேசலாம்.. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்!
டெல்லி: டெல்லி காற்று மாசு குறித்து கவலை தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளை விடவும் அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.
உடைக்க முடியாததைக்கூட உடைச்சீட்டீங்களே.. கோபமாக வீடியோ வெளியிட்ட ரஜினி ஹீரோயின்.. சாரி கேட்ட இண்டிகோ
காற்று மாசு
இந்நிலையில் டெல்லியில் அதிகரித்திருக்கும் காற்று மாசு குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கவலை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாஸ்க்குடன் செல்பி ஒன்றை ஷேர் செய்துள்ள அவர், காற்று மாசால் ஷுட்டிங் செய்வது கடினமாக உள்ளது.
பாதுகாப்பாக இருங்கள்
இதுபோன்ற நிலைமையில் இங்கு எப்படி வாழ்வது என்று நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. நாம் காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடிகளால் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறோம். வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என அறிவுரை கூறியிருந்தார்.
டபுள் ஸ்டாண்டர்டுஸ்
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஸ்மோக் பண்ணும் உங்கள் வாய்க்கு மாஸ்க் போட்டது சரிதான் என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி காற்று மாசு குறித்து உங்களை போன்ற டபுள் ஸ்டாண்டர்டுஸ் பேசக்கூடாது என்றும் கூறிவருகின்றனர்.
புகைப்பிடிக்கும் பழக்கம்
மேலும் காற்று மாசை பற்றி பேசுவதற்கு முன்பு புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பலர் காட்டமாக பேசியிருந்தாலும் பெரும்பாலானோர் அவர் நலனில் அக்கறை கொண்டு புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெட்டிசன்கள்
அண்மையில் பிரியங்கா சோப்ரா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது குடும்பத்துடன் உட்காந்து அவர் புகைப்பிடித்த போட்டோக்கள் வைரலானது. அப்போதே அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.