அபிநந்தனை விட படம் முக்கியமா?: பிரமாண்ட இயக்குநர், பக்ஷிராஜனை விளாசிய நெட்டிசன்ஸ்
மும்பை: இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில் இது முக்கியமா என்று கேட்டு பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் மற்றும் நடிகர் அக்ஷய் குமாரை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான் நடித்துள்ள கேசரி படத்தில் வரும் ஒரு பாடல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த படத்தை தயாரித்துள்ள கரண் ஜோஹாரும் ட்விட்டரில் அந்த பாடலை விளம்பரம் செய்தார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.
பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும்போது இது தேவையா அக்ஷய் குமார்?
அக்ஷய்
அக்ஷய் குமார் தவறான நேரத்தில் ட்வீட் போட்டுள்ளதாக அவரை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
கரண் ஜோஹார்
கேசரி பட பாடல் குறித்து ட்வீட்டிய கரண் ஜோஹாரையும் நெட்டிசன்கள் சும்மா விடவில்லை.
கேசரி
விமானி அபிநந்தனை விட கேசரி படம் முக்கியமாகப் போச்சோ?


Click it and Unblock the Notifications











