Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஐஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகள்.. இந்திய ரூபாயை கொச்சைப்படுத்தினாரா பிரியங்கா?
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஐஸ்க்ரீம் சாப்பிடும் புகைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Cash in my Dessert என்ற கேப்ஷனுடன் 500 ரூபாய் நோட்டுகள் அலங்கரிக்கப்பட்ட ஐஸ் க்ரீம் கப்புடன் பிரியங்கா பதிவிட்ட போட்டோ தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத ஏழைகள் வாழும் நாட்டில், ஐஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகளை அடுக்கி சாப்பிடுகிறாரே என கண்டனங்களும் எழுந்து வருகிறது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பாசத்திற்குரிய பாரதிராஜாவின் நன்றி அறிக்கை
|
ரியலா? ஃபேக்கா?
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட ஐஸ்க்ரீம் சாப்பிடும் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இது இந்திய ரூபாய் நோட்டை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது என கண்டித்துள்ளனர். அதற்கு பிரியங்காவின் ரசிகர்கள் சிலர், அது உண்மையான ரூபாய் நோட்டு அல்ல போலி என சமாளித்து வருகின்றனர்.
|
எங்கே கிடைக்கும்
டெல்லியில் உள்ள தவுலத் கி சாட் ஐஸ்க்ரீம் பார்லரில் தான் இப்படி 500 ரூபாய் போன்ற போலி நோட்டுகள் அலங்கரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்படுகிறது. சாப்பாட்டு விரும்பியான பிரியங்கா சோப்ரா, அந்த ஐஸ்க்ரீமை தேடி சென்று சாப்பிட்டு, Cash in my dessert என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
போட்டோகிராஃபர் ஆன ஹீரோ
பிரியங்கா ஐஸ்க்ரீம் சாப்பிடும் அந்த போட்டோவை பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் எடுத்துள்ளார். ஸ்கை இஸ் பிங்க் படத்திற்கு பிறகு, ஒயிட் டைகர் எனும் படத்தில் ராஜ்குமார் ராவுடன் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். ஷூட்டிங் கேப்பில், தவுலத் கி சாட் கடைக்கு சென்று இருவரும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுள்ளனர்.
|
காந்திஜி இல்லை
500 ரூபாய் நோட்டை ஐஸ்க்ரீமில் வைத்து சாப்பிடும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், காந்திஜி புகைப்படம் பதித்த ரூபாய் நோட்டை சாப்பிடும் பொருளில் வைத்து அவமதிப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த ஃபேக் நோட்டில் காந்திஜி படம் அச்சடிக்கவில்லை என சில ரசிகர்கள் வாதிட்டு வருகின்றனர்.