உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா விக்னேஷ் சிவன்?
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பயங்கரம் பற்றி பேசாத நீங்கள் நயன்தாராவுக்காக மட்டும் கொந்தளிக்கிறீர்களே என்று நெட்டிசன்கள் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடிகர் ராதாரவி தனது காதலி நயன்தாராவை பற்றி கீழ்த்தரமாக பேசியதை பார்த்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கோபத்தில் உள்ளார். தனது கருத்துகளை எல்லாம் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.
ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி விவகாரத்தில் அமைதியாக இருந்த விக்னேஷ் சிவன் நயன்தாராவை பற்றி விமர்சித்தவுடன் பொங்குவதை பார்த்து தான் ஒருவர் இப்படி கேட்டுள்ளார்.
மீ டூ
மீ டூ சமயத்தில் ஏன் அமைதியாக இருந்தீர்கள். தற்போது உங்களின் தோழி பாதிக்கப்பட்டுள்ளதால் குரல் கொடுக்கிறீர்கள்.
2017
2017, 2018ல் ராதாரவி என்ன செய்தார் என்று கூறிய விக்னேஷ் சிவனை, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளை ராதாரவி கிண்டல் செய்தபோது குரல் கொடுக்காத விக்னேஷ் சிவன் தற்போது நடிகைக்காக குரல் கொடுப்பது மட்டும் சரியா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











