Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மோடி பட தயாரிப்பாளர் யார் தெரியுமா?: தீயாக பரவும் அதிர்ச்சி தகவல்
மும்பை: பி.எம். நரேந்திர மோடி படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் வெளிநாட்டு சிறுவனக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ள அந்த படத்தை சந்தீப் சிங் தயாரித்துள்ளார்.
முன்னதாக சந்தீப் சிங் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைனர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியவர். இந்நிலையில் மோடி படத்தை யார் தயாரிக்கிறார் என்று பாருங்கள் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சந்தீப் சிங் கடந்த ஆண்டு தான் பாலியல் புகாரில் சிக்கினார். அதன் விபரம் இதோ,
மோடிஜி நீங்க அறிவிப்பு விட்டாலே பயந்து கெடக்கு: அஜித் பட நடிகை கலகல
சந்தீப் சிங் புது படத்திற்கு லொகேஷன் பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அங்கு அவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சிறுவனிடம் நைசாக பேசி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுவன் அவர் பிடியில் இருந்து தப்பிச் சென்று தனது தந்தையிடம் நடந்தது பற்றி தெரிவித்துள்ளார்.
சிறுவனின் தந்தை ஹோட்டல் ரிசப்ஷனுக்கு சென்றால் அங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லையாம். ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சிறுவனிடம் சில்மிஷம் செய்த வேகத்தில் சந்தீப் ஹோட்டலை விட்டு வெளியேறி, மறுநாளே நாடு திரும்பிவிட்டார்.
இது குறித்து சிறுவனனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி நடந்த சம்பவம் பற்றி மக்கள் தற்போது மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.