twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபிஷேக் வேலையை சஞ்சீவ் பார்க்கிறாரா... சந்தேகம் கிளப்பும் நெட்டிசன்கள்

    |

    சென்னை : பிக்பாஸில் டிக்கெட் டு ஃபினாலேவை வெல்வதற்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. சந்தோஷமாக துவங்கப்பட்ட இந்த டாஸ்க், இப்போது அடித்துக் கொண்டு சாகும் அளவிற்கு ரணகளமாக மாறி உள்ளது.

    டாஸ்கின் முதல் நாளில் அதிகமானவர்களால் தேர்வு செய்யப்பட்டு, நிரூப் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த டாஸ்க் முடிந்ததுமே தாமரை, எனக்கு ஜெயிக்க வேண்டாம் என பேசியதை வைத்து ஆரம்பித்த பிரச்சனையால் மற்ற போட்டியாளர்கள் அவருக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர்.

    பாப்புலர் ஆன வருண்–அக்ஷரா... நேரில் வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள் பாப்புலர் ஆன வருண்–அக்ஷரா... நேரில் வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்

    அபிஷேக் வேலையை பார்க்கிறாரா

    அபிஷேக் வேலையை பார்க்கிறாரா

    தாமரை பற்றியும், அவரின் கேம் ஸ்டாட்டர்ஜி பற்றியும் சஞ்சீவ், அமீர், பிரியங்கா, பாவனி, சிபி ஆகியோர் பேசிக் கொள்கிறார்கள். இவர்களில் சஞ்சீவ், தாமரைக்கு எதிராக மற்றவர்களை மாற்றுவதற்காக இன்ஃப்ளுயன்ஸ் செய்வதை பேசியது தாமரையின் ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அபிஷேக்கின் வேலையை இப்போது சஞ்சீவ் செய்கிறாரா என கேட்க துவங்கி விட்டனர்.

    சஞ்சீவ் ஏன் டென்ஷன் ஆனார்

    சஞ்சீவ் ஏன் டென்ஷன் ஆனார்

    பிரியங்கா, தாமரை டாஸ்க் பற்றி பேசிக் கொண்டிருந்த போது சம்பந்தமே இல்லாமல் சஞ்சீவ் எதற்காக குறுக்கே வந்து அவ்வளவு டென்ஷன் ஆனார். அதே போல் தாமரை ஜெயிக்க வேண்டாம் என சொன்னது பற்றி பிரியங்கா, சிபி, பாவனி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதும் அவராக வந்து கருத்து சொன்ன சஞ்சீவ், மக்கள் சப்போர்ட் இருப்பதால் தாமரைக்கு எதிராக பேச அனைவரும் பயப்படுகிறீர்கள். எனக்கு அந்த பயம் இல்லை என்றார்.

    சூடான பிரியங்கா

    சூடான பிரியங்கா

    சஞ்சீவ்வின் இந்த பேச்சிற்கு பிறகு தான் பிரியங்கா அதிக சூடாகி விட்டார். நேற்றைய முட்டை டாஸ்கின் போது சஞ்சீவ் அமைதியாக நிற்க, பிரியங்கா தான் தாமரையை வம்பிழுக்கும் வகையில் பேச்சை துவக்கினார். எதற்கு ஓயாமல் பேசுகிறார் என பிரியங்காவை தாமரை கேட்டதால், அவர் மீதான கோபம் அதிகரித்தது தான் நேற்றைய டாஸ்க் அடிதடி அளவிற்கு செல்ல காரணமாக அமைந்தது.

    ராஜுவின் சந்தேகம்

    ராஜுவின் சந்தேகம்

    இரவு நேரத்தில் ராஜு, அமீர், சஞ்சீவ் பேசிக் கொண்டிருக்கையில், கயிறு டாஸ்கின் போது தாமரை பாத்ரூம் போக வேண்டும் என சொன்ன போது தாமரை மற்றும் நிரூப் இடையே பயங்கர சண்டை நடந்தது. ஆனால் இப்போது அவர்கள் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கிறார்கள். இது எப்படி அண்ணே என ராஜு, சஞ்சீவிடம் கேட்கிறார்.

    Recommended Video

    Bigg Boss Sanjeev-க்கு Vote போடும் Thalapathy Vijay | Preethi Sanjeev
    அவங்க டார்கெட் நான் தான்

    அவங்க டார்கெட் நான் தான்

    ஆனால் அதற்கு சஞ்சீவ், கேட்டால் அது டாஸ்க். டாஸ்க் முடிந்தது நாங்க ஃபிரண்ஸ் என்பார்கள். ஆனால் தாமரையின் அடுத்த டார்கெட் நான் தான். அவர்களை எதிர்த்து ஏதாவது சொன்னால் அவர்களை டார்கெட் செய்ய துவங்குகிறார் என்கிறார். எதற்காக சம்பந்தமே இல்லாமல் சஞ்சீவ்விற்கு எதிராக மற்றவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் பேசுகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    English summary
    Netizens questioned why sanjeev influencing others against thamarai. After he influencing, priyanka get angry with thamarai. sanjeev was the reason behind thamarai - priyanka's yesterday fight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X