Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய நிரஞ்சனி.. குட்டி டிரவுஸர்.. கொண்டையில் ஹனிமூன் கொண்டாட்டம்!
சென்னை: நடிகை நிரஞ்சனி அகத்தியன் ஷேர் செய்துள்ள ஹனிமூன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
துல்கர் சல்மான், ரித்து வர்மா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி அகத்தியன். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார் நிரஞ்சனி.
ரக்ஷனுக்கு ஜோடியாக
நிரஞ்சனி இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் ஆவார். இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாகவும் நடிகர் ரக்ஷனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். பல அதிரடித் திருப்பங்களை கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ரஜினி பாராட்டினார்
பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வசூலை வாரி குவித்தது. நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து விட்டு இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
ரஜினி பேசிய ஆடியோ
மேலும் தனக்கும் ஒரு கதை ஏற்பாடு செய்யும்மாறும் கூறினார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பேசிய அந்த ஆடியோ இணையத்தில் கசிந்து பெரும் வைரலானது.
பிப்ரவரியில் திருமணம்
இதனிடையே நடிகை நிரஞ்சனிக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் இடையே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் போதே காதல் மலர்ந்தது. இருவரின் காதலுக்கும் இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
மாலத்தீவில் ஹனிமூன்
இந்நிலையில் கடந்த வாரம் நிரஞ்சனி மாலத்தீவில் இருந்த போட்டோக்களை ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் ஹனிமூன் கொண்டாட்டமா என கேட்டுவந்தனர். மேலும் தேசிங்கு பெரியசாமியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும் கூறி வந்தனர்.
குட்டி ட்ரவுஸரில்..
இந்நிலையில் நிரஞ்சனி மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தொடை வரை உள்ள குட்டி ட்ரவுஸரை அணிந்துள்ள நிரஞ்சனி, ட்ரான்ஸ்ப்ரன்ட் ஷர்ட்டில் பீச் மணலின் விளையாடுகிறார்.
கணவருடன் சேர்ந்து..
நிரஞ்சனியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், க்யூட் என வர்ணித்துள்ளனர். சில நெட்டிசன்கள் உங்கள் கணவருடன் சேர்ந்து சில போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் அடுத்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்பீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.