சன் டிவில வேலைய விட்டுடுச்சா இந்த பொண்ணு.. அப்போ அந்த சீரியலுக்கு ஹீரோயினாக்கிடுவாங்க!
சென்னை: செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்திற்கு அதற்குள்ளாகவே ஆதரவை வாரி வழங்கியுள்ளனர் ரசிகர்கள்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் கருத்து தெரிவிக்க தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
இதில் செம க்யூட்டாக வந்த செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பலரையும் கவர்ந்துள்ளார். குறிப்பாக கமலுடன் பேசும் போது மழை பேய்ந்து ஓய்ந்தது போல் இருந்தது.

அனிதாவுக்கு ஆதரவு
இந்நிலையில் அனிதா சம்பத்திற்கு இன்றே தங்களின் ஆதரவை காட்ட தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். டிவிட்டரில் அனிதா சம்பத் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஹீரோயின் ஆக்கிருவாங்க
அனிதா சம்பத்தின் என்ட்ரியை பார்த்த இந்த நெட்டிசன் சன் டிவி வேலையை விட்டுருச்சா இந்த பொண்ணு.. ராஜா ராணி 3 ஹீரோயின் ஆக்கிருவான்களே.. என்று கூறியிருக்கிறார்.

பழகிப் பார்க்கலாம்
மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா சம்பத் வரமாட்டாங்கன்னு சொன்னாங்க.. பழகிப் பார்க்கலாம்.. இப்போதைக்கு அனிதா சம்பத் குறித்து எந்த ஓப்பினியனும் இல்லை என கூறியுள்ளார்.

லிஸ்ட்லேயே இல்லயே..
அனிதா சம்பத்தின் எதிர்பாராத என்ட்ரியை பார்த்த இந்த நெட்டிசன், இது நம்ம லிஸ்ட்லயே இல்லயேப்பா.. என்கிறார் இந்த நெட்டிசன். மேலும் மணிவண்ணன் ஆவென பார்க்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

மழை பெய்ஞ்சு
மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா சம்பத் நல்லா சண்டை போடுவார் என்பதை போல் டிவிட்டியுள்ளார். பேசும்போது மழை பெய்ஞ்சு ஓஞ்சமாதிரி இருக்கு. அனேகமா சண்டை போட்டா எதிராளியோட மூளை யும்,வார்த்தையும் தடுமாறும் என பதிவிட்டுள்ளார்.

பாவம் போங்க
மற்றொரு நெட்டிசனான இவர், பாவம் இந்த டிவியை நம்பி சன் டிவியில் வேலையை விட்டு விட்டார்.... பாவம்... என பதிவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி விஜய் டிவி கடந்த பிக்பாஸில் பங்கேற்றதற்கான சம்பளத்தை தனக்கு தரவில்லை என குற்றம்சாட்டிய நிலையில் இந்த நெட்டிசன் அனிதா சம்பத்துக்காக அனுதாபப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











