Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாய் கூசாம இப்படி பொய் சொல்றீங்களே: ரஜினி வில்லனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
மும்பை: கடந்த 7 ஆண்டுகளாக கனடாவுக்கு செல்லவே இல்லை என்று பொய் சொல்லி நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
அக்ஷய் குமார் மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுத்து கனடா குடியுரிமை பெற்றுள்ளார். இந்தியாவில் வசித்துக் கொண்டு கனடா குடியுரிமை ஏன் என்று நெட்டிசன்கள் அவரை விளாசினார்கள்.
கனடா குடியுரிமை பெற்றபோதிலும் கடந்த 7 ஆண்டுகளாக அங்கு செல்லவே இல்லை என்று ட்வீட் செய்தார் அக்ஷய் குமார்.
துணை நடிகரைக் காதலிக்கும் பிரபல நடிகை.. பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் டும் டும் டும்?
|
கனடா
அக்ஷய் குமார் கடந்த 2014ம் ஆண்டு டொரண்டோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி குறித்த ட்வீட்டுகள், புகைப்படங்களை தேடி எடுத்த நெட்டிசன்கள் அக்ஷய் அநியாயத்திற்கு பொய் சொல்கிறார் என்று வறுத்தெடுத்துள்ளனர்.
அக்ஷய்
இது தான் என் வீடு. டொரண்டோ தான் என் வீடு. நான் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இங்கு தான் செட்டில் ஆவேன். நான் இங்கு வந்து தங்கப் போகிறேன் என்று அக்ஷய் முன்பு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது. அதில் இருந்து அவரின் குடியுரிமை பிரச்சனை குறித்து தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
குடிமகன்
பிறந்த நாட்டின் அடையாளத்தை விட்டுக் கொடுத்து அடுத்த நாட்டு குடியுரிமை வாங்குவதில் அக்ஷய் குமாருக்கு அப்படி என்ன பெருமை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நெட்டிசன்கள் விளாசினாலும் ஒரு சில பிரபலங்கள் அக்ஷய்க்கு ஆதரவு அளித்துள்ளனர்.
|
ஒடிஷா
ஃபனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷா மாநிலத்திற்கு அக்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளார். யார் விளாசினாலும் தனது நல்ல குணத்தை மாற்றிக் கொள்ளாதவர் அக்கி என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.