Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாய் கூசாம இப்படி பொய் சொல்றீங்களே: ரஜினி வில்லனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
மும்பை: கடந்த 7 ஆண்டுகளாக கனடாவுக்கு செல்லவே இல்லை என்று பொய் சொல்லி நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
அக்ஷய் குமார் மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுத்து கனடா குடியுரிமை பெற்றுள்ளார். இந்தியாவில் வசித்துக் கொண்டு கனடா குடியுரிமை ஏன் என்று நெட்டிசன்கள் அவரை விளாசினார்கள்.
கனடா குடியுரிமை பெற்றபோதிலும் கடந்த 7 ஆண்டுகளாக அங்கு செல்லவே இல்லை என்று ட்வீட் செய்தார் அக்ஷய் குமார்.
துணை நடிகரைக் காதலிக்கும் பிரபல நடிகை.. பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் டும் டும் டும்?
|
கனடா
அக்ஷய் குமார் கடந்த 2014ம் ஆண்டு டொரண்டோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி குறித்த ட்வீட்டுகள், புகைப்படங்களை தேடி எடுத்த நெட்டிசன்கள் அக்ஷய் அநியாயத்திற்கு பொய் சொல்கிறார் என்று வறுத்தெடுத்துள்ளனர்.
அக்ஷய்
இது தான் என் வீடு. டொரண்டோ தான் என் வீடு. நான் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இங்கு தான் செட்டில் ஆவேன். நான் இங்கு வந்து தங்கப் போகிறேன் என்று அக்ஷய் முன்பு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது. அதில் இருந்து அவரின் குடியுரிமை பிரச்சனை குறித்து தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
குடிமகன்
பிறந்த நாட்டின் அடையாளத்தை விட்டுக் கொடுத்து அடுத்த நாட்டு குடியுரிமை வாங்குவதில் அக்ஷய் குமாருக்கு அப்படி என்ன பெருமை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நெட்டிசன்கள் விளாசினாலும் ஒரு சில பிரபலங்கள் அக்ஷய்க்கு ஆதரவு அளித்துள்ளனர்.
|
ஒடிஷா
ஃபனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷா மாநிலத்திற்கு அக்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளார். யார் விளாசினாலும் தனது நல்ல குணத்தை மாற்றிக் கொள்ளாதவர் அக்கி என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.