Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காசுக்காக இந்த கீழ்த்தரமான வேலையை செய்வதா?: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்
மும்பை: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் செய்த காரியத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேவலமாக திட்டியுள்ளனர்.
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு சர்ச்சை என்றால் மிகவும் பிடிக்கும். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை கிளப்புவது அல்லது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார் அவர்.
இந்நிலையில் அவர் பாகிஸ்தான் கொடியை தன் மீது போர்த்திக் கொண்டபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தாரா 370 படத்திற்காக அப்படி செய்தேன் மற்றபடி எனக்கு இந்தியா தான் பிடிக்கும் என்று ராக்கி விளக்கம் அளித்துள்ளார்.
ராக்கியின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் விளக்கத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். காசுக்காக இப்படி ஒரு செயலை செய்வதா, எவ்வளவு பணம் கொடுத்தாலும் பாகிஸ்தான் கொடியை என் மீது போர்த்த மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டாமா என்று விளாசியுள்ளனர்.
அடித்து, மாடியில் இருந்து தள்ளினார்: பார்த்திபன் மீது போலீசில் புகார்
சிலரோ பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள். உங்கள் பெயரை ராக்கி பாகிஸ்தானி சாவந்த் என்று மாற்றிக் கொள்ளுங்கள் என்று பொறிந்து தள்ளியுள்ளனர். மேலும் பலரோ உங்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்திவிடுவோம் என்று கோபமாக தெரிவித்துள்ளனர்.
ராக்கி சாவந்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அதனால் தான் இப்படி செய்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.