அடுத்த காயத்ரி வனிதா... அடுத்த ஜூலி அபிராமி... விளாசும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பெரும் சண்டை நடப்பது இன்றைய ப்ரமோ மூலம் உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சண்டைக்கு காரணமானவர்களை நெட்டிசன்கள் விளாச தொடங்கிவிட்டனர்.
இன்று காலையில் வெளியான பிக்பாஸ் ப்ரமோவில் முதலில் அபிராமிக்கும் புதிதாக வந்த மீராவுக்கும் இடையே சண்டை நடக்கிறது. அப்போது படு திமிராக என்னிடம் பேசாதே என கூறிவிட்டு செல்லும் அபிராமி அந்த சண்டையில் வனிதாவை இழுத்து விடுகிறார்.
இதனால் வனிதாவுக்கும் மீராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்துள்ளனர். கூடவே சண்டைக்கு காரணமானவர்களை விளாசியும் வருகின்றனர்.
கலவரம் வரும்போல இருக்கே
நெனைச்சதை விட... பெரிய கலவரம் வரும்போல இருக்கே!
பெரிய ஆளுதான்யா!
சும்மாவே கும்மாளம் போட்ட கும்பல்களுக்கு நடுவே பெரிய அணுகுண்டை தூக்கிபோட்டு கலவரம் உண்டு செய்த.... இந்த பெரியபாசு ..பெரியஆளுதான்யா!
அடிச்சு காட்டு தலைவி
இன்னும் நல்லா அடிச்சு காட்டு தலைவி
அடுத்த ஜூலி அபிராமி
அடுத்த காயத்ரி வனிதா... அடுத்த ஜூலி அபிராமி..
வனிதாவ கோர்த்து விட்டுறுச்சு போல
அபிராமி வனிதாவ கோர்த்து விட்டுறுச்சு போல
பெருசா பிளான் பண்ணிட்டாங்க
இப்ப எதுக்கு அபிராமியும் சாக்ஷி அகர்வாலும் வனிதா விஜயகுமாரை மீரா மிதுன் கூட கோர்த்து விடுதுங்கள்..
ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டாங்க.
உண்மையா ஷோவே இன்னைக்குதான்
எல்லா பெண்களும் மீரா மிதுனுக்கு எதிராக உள்ளன.
செம சண்டை நடக்க போகுது...
உண்மையா ஷோவே இன்னைக்குதான் தொடங்க போகுது..
வனிதா இது உனக்கு நல்லது இல்ல
வனிதா என்னமா பாஸ்ட் பேச கூடாது.?? நேத்திக்கு #அபிராமி, #சாக்ஷி நீயும் சேர்ந்து அந்த கூடாரத்துல என்ன எழவு பேசினீங்க?? வனிதா இது உனக்கு நல்லது இல்ல.
ஜோரா நடக்குது போல..
விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு கமல் அப்பவே சொன்னாரு. ஜோரா நடக்குது போல..


Click it and Unblock the Notifications











