Don't Miss!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொடூர எண்ணம்.. வாயை திறந்தாலே பொய்.. ஆரியை கட்டம் கட்டிய பாலாஜியை கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ஆரியிடம் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கும் பாலாஜியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் கால் செண்டர் டாஸ்க் தொடங்கியுள்ளது தெரிந்தது.
இதில் ஆரிக்கு கால் செய்யும் பாலாஜி, ஆரி யாரையும் காலி பண்ணி விளையாடனும்னு நினைக்கலையா? நான் கெட்டவன்னு சொல்றான்ல அவன நம்பிடலாம், நான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவன கூட நம்பிடலாம்.
கெட்டவராக காட்ட
ஆனா நான் மட்டும்தான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவன நம்பவே முடியாது என பேசுகிறார். அவர் பேசுவது அப்படியே ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மனதில் வைத்து, ஆரியின் பெயரை கெடுக்க வேண்டும், அவரை கெட்டவராக காட்ட வேண்டும் என்றே பேசுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
தன்னைத் தானே டேமேஜ்
இதனை பார்த்த ரசிகர்கள், செம கடுப்பாகியுள்ளனர். ஆரியை டேமேஜ் பண்ணுவதாக நினைத்து பாலாஜி தன்னைத் தானே டேமேஜ் செய்து கொள்கிறார் என்றும் விளாசியுள்ளனர். மேலும் பாலாஜியை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
உன்னையும் மீறி பேசுவது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அவரு நல்லவருனு நீ தாண்டா வார்த்தைக்கு வார்த்தை சொல்ற! அவரு நான் மட்டும் தான் நல்லவன்னு எப்ப சொன்னாரு?? உன் மனசாட்சி உன்னையும் மீறி பேசுது பாவம்.. என பாலாஜியை விளாசியுள்ளார்.
மீண்டு வருவான்..
ரமோவில் பாலாஜி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், நல்லவன்னு ஒருத்தன் இருந்தா அவன் மீது ஏதாவது பழியை போட்டு மட்டம் தட்டிகிட்டே இருப்பானுங்க!. ஆனா அதையும் மீறி நல்லவன் மீண்டு வருவான் அவனே உண்மையான வெற்றியாளன்!. அது எங்க ஆரி! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
சிரிப்பு மூட்டிக்கிட்டு
உன் மிச்ச 50 நாள் கோல் எப்படியாவது ஆரி ஃபர்ஸ்ட் டே சேவ் ஆக கூடாது! முதல் நாள் நீ மட்டும் சேவ் ஆகனும்! ஆரி இரண்டாவது நாள் சேவ் ஆனா குழந்தைப்புள்ள சந்தோசமா இருப்ப அதானே.. சிரிப்பு மூட்டிக்கிட்டு போப்பா அங்கிட்டு! என பாலாஜியை கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.
வாயை தொறந்தாலே
புரமோவில் பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், டேய்... அடாவடி அடமெண்ட்!... நீ முதலில் திருந்து!... வாயை தொறந்தாலே பொய்யா சொல்லிகிட்டு திரியறான் இந்த பயில்வான் என பாலாஜியை விளாசி தள்ளியிருக்கிறார்.
சாக்லேட் பத்தலையாம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீ அழக்கூடாதுனு தான் உன்னையும் அவரையும் சேர்த்து முதல் நாள் சேவ் பண்ணாரு
கமல் சார். கமல் சார் அவனுக்கு சாக்லேட் பத்தலையாம் இந்த வாரம் ஆரிய செகண்ட் டே சேவ் பண்ணுங்க அழாம இருப்பான்!
டெய்லி ஒரு பொய் என பாலாஜியை பங்கம் பண்ணியுள்ளார்.
பழசை எல்லாம் மனதில் வைத்து
புரமோவில் பாலாஜி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், கொடூர எண்ணம் கொண்ட பயில்வான். பழசை எல்லாம் மனதில் வைத்துகொண்டு பழி போடுறான் பாருங்க என அவரை கழுவி ஊற்றியுள்ளார்.
உன்னையே நீ கேளு
பிக்பாஸின் இன்றைய முதல் புரமோவில் பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், டேய் பயில்வான் பாலாஜி.. நீ கேட்ட கேள்வியை.. கண்ணாடி முன்னாடி நின்னு உன்னையே நீ கேளு என அவரை சாடியிருக்கிறார்.
காமெடி பீசுடா..
அடேய் பாலாஜி இப்ப என்னடா சொல்ல வர.. நான் கெட்டவன் சோ நான் நல்லவன்னு சொல்ல வர்றீயா.. அடேய் நீ கெட்டவன் எல்லாம் இல்ல கெட்டவனு நினைச்சிட்டு இருக்குற காமெடி பீசுடா நீ என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.
மிருகமா?
புரமோவில் பயில்வான் வெறுப்பேற்றும் வகையில் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன். இந்த பயில்வான் மனிதனா?... மிருகமா? என கேட்டுள்ளார்.
ஒரே நஞ்சகன்
புரமோவில் ஆரியிடம் படு மோசமாக பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், வஞ்சக எண்ணம் கொண்ட ஒரே நஞ்சகன் இந்த பயில்வான் என திட்டி தீர்த்துள்ளார்.
தன் தலையில் மண்ணை..
ஆரி எப்படா நான் மட்டும் நல்லவன்னு ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.. பெரிய ஸ்மார்ட் என்ற நினைப்புல கேள்வி கேட்டு தன் தலையில் மண் அள்ளி போடும் மூமெண்ட் இது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.