Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராஜுவை சும்மா சீண்டும் பாவனி.. எல்லாருமே என்ஜாய் பண்ண அவர் மட்டும் ஏன் பிரச்சனை பண்றாரு?
சென்னை: ராஜுவை பிடிக்கும் என சொல்லிக் கொண்டே ராஜு மீது தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்து வருகிறார் பாவனி என்கிற குற்றச்சாட்டை ராஜுவின் ஆர்மியினர் வைத்து வருகின்றனர்.
ராஜுவின் கண்ணாடியாக பிரதிபலித்த பாவனி அவருடன் இணைந்து நல்லா என்டர்டெயின் பண்ணிட்டு ராஜுவை அசிங்கப்படுத்தும் நோக்கில் ஃபிரேமுக்கு முன்பாக நின்று கொண்டு பேசியது தவறு என கண்டித்து வருகின்றனர்.
அக்ஷரா, பிரியங்கா, தாமரை என ஹவுஸ்மேட்கள் அனைவரையும் ராஜு பிரியங்காவின் கண்ணாடியாக இருந்த போது கலாய்த்து பேச அனைவரும் சிரித்தனர்.
தன்னை விட 5 வயது சிறிய நடிகரை திருமணம் செய்யும் பிரபல நடிகை... கல்யாணம் எங்கேன்னு பாருங்க?
பாவனி மட்டும்
ஆனால், பாவனி மட்டும் ராஜு பேசி விட்டு வந்த உடனே அது குறித்து கேள்விகளை எழுப்பி பிரச்சனையை கிளப்பியதை எபிசோடில் பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். நான் உன் மிரர் ஆக இருந்தால் எல்லாத்தையும் சொல்றேன் இப்போ வேணா என ராஜு ஒதுங்கி போனாலும் வழிய வந்து வம்பு செய்து வருகிறார் பாவனி.
அபிநய் உடன் சண்டை
இதே போலத்தான் பாவனி ஆரம்பத்தில் அபிநய் உடன் நெருங்கி பழகி பேசி விட்டு பின்னர் வருண் உடன் சேர அபிநயையே போட்டுக் கொடுத்து பப்ளிக்காக அசிங்கப்படுத்தி பிரச்சனை செய்தார். அதன் காரணமாகத்தான் நெட்டிசன்கள் பாவனியை பாய்சன் என விளாசி வருகின்றனர். ராஜுவும் பாவனியிடம் இருந்து விலக மூன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்ததாக கூறிய நிலையில், அபிநய் பிரச்சனை அதில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
வருணையும் கோபப்படுத்தி
சுருதி காயினை திருடிய பஞ்சாயத்தில் தலையிட்ட வருணிடமும் பாவனி ஓவராக பேசி சண்டை போட்டதும் ராஜுவுக்கு பிடிக்காமல் போய் இருக்கலாம் என்றும் ராஜுவின் ரசிகர்கள் கூறுகின்றனர். நல்லா சாஃப்ட்டா அழகா பேசி அசிங்கப்படுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பாவனி என்பது தான் ராஜுவுக்கு அவர் மீது வெறுப்பு வர காரணமே என்கின்றனர்.
தப்பா காட்டாதீங்க
மற்றவர்களிடம் சிரித்து பேசி மகிழும் உங்களை ரொம்பவே எனக்குப் பிடிக்கும். உங்களுடன் நட்பு பாராட்ட நிறைய தடவை முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், நீங்க தான் விலகி போறீங்க, என்னை ரொம்ப தப்பா காட்ட நினைக்காதீங்க ராஜு என பாவனி ராஜுவிடம் பேசியது தேவையில்லாத ஆணி என்றே நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
வேண்டாம்
ராஜு தன்னிடம் பேசாமல் போகிறாரா போகட்டும் என பாவனி விட்டு விட்டால் அவர் மீது மரியாதை கூடியிருக்கும். ஆனால், தொடர்ந்து ராஜுவை டார்கெட் செய்யும் நோக்கிலேயே பாவனி அவரிடம் தொடர்ந்து பிரச்சனை செய்வது சரியல்ல என்றும் பிரியங்கா, அக்ஷரா, நிரூப், இசைவாணி, தாமரை என அனைவரையும் ராஜு கலாய்க்க அனைவரும் என்ஜாய் பண்றாங்க ஆனால், ராஜு பேசியதும் பாவனியின் முகம் மட்டுமே மாறி போனதும் அது பற்றி பேசி பிரச்சனை செய்ததும் சரியல்ல என்று ஏகப்பட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.