Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சபரிமலைக்கு மாலைய போட்டுட்டு.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. சிம்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகர் சிம்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு ஸ்டார் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டதை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். இவர் நடிப்பில் உருவாவதாக இருந்த மாநாடு படம் பின்னர் டிராப் செய்யப்பட்டது.
மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சிம்புவின் தயார் இப்பிரச்சனையில் தலையிட்டு சிம்பு சொன்னப்படி படத்தில் நடித்துக்கொடுப்பார் என உறுதி கொடுத்தார்.
|
40 நாட்கள் விரதம்
இதனால் மாநாடு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வந்த கையோடு சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். 40 நாட்கள் விரதம் முடித்து கோவிலுக்கு சென்று வந்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது.
ரசிகர்கள் சந்தேகம்
சிம்பு கறுப்பு உடையில் சபரி மலைக்கு மாலை போட்டிருந்த போட்டோக்கள் வெளியானது. இதனால் மாநாடு படம் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர்.
டின்னர் டைம்
இந்நிலையில் சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத், சிம்புவுடன் டின்னர் சாப்பிட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டின்னர் டைம் வித் சுவாமி என தெரிவித்திருக்கிறார் மகத்.
நெற்றியில் பட்டை
அந்த போட்டோவில் நடிகர் சிம்பு கறுப்பு உடை, நெற்றில் சந்தனப் பட்டை விபுதி என பர்ஃபெக்ட் அய்யப்ப பக்தராக காட்சியளிக்கிறார். அதனை பார்த்த சில ரசிகர்கள், வாவ்.. செம என கமென்ட் தெரிவித்துள்ளனர்.
நல்லாவா இருக்கு?
அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர். சிம்புவை முதலில் எடையை குறைக்க சொல்லுங்கள், எப்போது மாநாடு ஷுட்டிங் என கேட்டுள்ளனர். மேலும் சிலர் மாலைய போட்டுக்கிட்டு இதெல்லாம் நல்லாவா இருக்கு என கேட்டுள்ளனர்.
|
பாத்ரூம்ல டப்பிங்
ஸ்டார் ஓட்டல்ல விரதம் இருக்கிறாரு.. பாத்ரூம்ல டப்பிங் பேசுறாரு.. சூட்டிங் வர்ரத தவிர மத்த எல்லாம் கரெக்டா பண்றாரு..
இன்னுமா இவனுங்கள உலகம் நம்புது.. என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
கிழித்தெறிந்தேன்
எவ்வளவு திறமை இருந்தாலும் தலைகனம் வாழ்க்கையை மாற்றி விடும்...சிம்புவின் வெறி தன ரசிகன் நான்...ஆனால் அது சிம்புவை நேரில் பார்த்த நொடிக்கு முன் வரை என்று ஆனது....சிறிய புன்னகை அல்லது ரசிகன் பக்கம் பார்வை என்று இல்லாமல் நான் வாங்கிய ஆட்டோகிராப் கிழித்து தான் எறிந்தேன்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.