அச்சச்சோ.. எங்கடா ஆரியை காணோம்.. ப்ரோமோவை பார்த்து பதறும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ஆரியை தவிர மற்ற அனைவரும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் அனிதா சம்பத் மீண்டும் வந்திருப்பது இன்றைய முதல் புரமோவில் தெரிய வந்தது. வீட்டுக்குள் வந்த அனிதா சம்பத்தை ஹவுஸ்மேட்ஸ் கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.
ஆனால் இந்த புரமோவில் ஆரியை மட்டும் காணவில்லை. வெளியேயும் சரி வீட்டுக்குள்ளேயும் சரி, முதல் புரமோவில் காட்டப்பட்ட காட்சிகளில் ஆரி இடம்பெறவில்லை.

ரியோ மட்டும் காட்றீங்க
இதனை பார்த்த ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர். கோடான கோடி ரசிகர்கள் பார்க்க காத்திருக்கும் ஒரு போட்டியாளரை மறைத்து வைப்பதா என்றும் ரியோவை மட்டுமே எல்லாவற்றிலும் ஃபோகஸ் செய்கிறீர்கள் என்றும் விளாசி வருகின்றனர்.

ஸ்டே ஸ்ட்ராங்
முதல் ப்ரோமோவில் அனிதா சோகமாக இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், ரொம்ப கஷ்டமா இருக்கு.. எப்படி இருந்த பொண்ணு! ஸ்டே ஸ்ட்ராங் என பதிவிட்டுள்ளார்.

டிஆர்பி தேடும் பிக்பாஸ்
முதல் புரமோவில் அனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதாவின் அனுதாபங்கள் மூலமாக பணம் சம்பாதிக்கும் விஜய் டிவி.. இதிலும் டிஆர்பி தேடும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. என விளாசியுள்ளார்.

டைட்டிலுக்கு மரியாதை
முதல் புரமோவில் ஆரி இல்லாததை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி வென்றால்தான் அந்த பிக்பாஸ் டைட்டிலுக்கு மரியாதை கிடைக்கும்.. என பதிவிட்டுள்ளார்.

ஆரியை காணோம்?
முதல் புரமோவில் ஆரி இல்லாததை பார்த்த இந்த நெட்டிசன், எங்க சகோ ஆரியை காணோம்? அவர ஸ்ட்ரெஸாக்கவே விஜய் டிவி எல்லோரையும் உள்ள அனுப்பி இருக்காங்க. அனிதா, சனம் தவிர மத்தவங்க எல்லோரும் மேக்ஸிமம் அவரை கார்னர் பண்ணி ஸ்ட்ரெஸ் ஆக்க உள்ள போயிருக்காங்க என்று பதிவிட்டுள்ளார்.

லூஸா தெரிகிறேனா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா வீட்டுக்குள் வருபவர்களிடம் எல்லாம் புலம்புவதை பார்த்த இந்த நெட்டிசன். பார்த்த இந்த நெட்டிசன், வெளியே நான் மாஸா தெரிகிறேனா, லூஸா தெரிகிறேனா? சொல்லுங்க! தயவுசெய்து சொல்லுங்க!.. நான் எப்படி? ஏன் இப்படி? எப்படி அப்படி?.. யாராவது சொல்லுங்கப்பா! அய்யா சொல்லுங்கய்யா! நீங்களாவது சொல்லுங்க!.. பல்பு பாலாவின் பரிதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

எங்கய்யா ஆரி?
புரமோவில் ஆரி இல்லாததை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு! எங்கேய்யா ஆரி? என கேட்டு பதிவிட்டுள்ளார்.

மொக்க பிக்பாஸ் மாதிரியே
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எங்கடா.. புரமோவுல ஆரியையும் பாலாஜியையும் காணோம்! உங்க சீரியல் சிம்பதிக்கு அவங்க ஒத்து வர மாட்டாங்கனு ஒதுக்கி வச்சிட்டிங்களா? நேத்து பாத்த கிரெஞ்சுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரும் தாங்க முடியாம தனியா போயிட்டாங்க போல.
இப்ப தான் பழைய மொக்க பிக்பாஸ் மாதிரியே இருக்கு என்று விளாசியுள்ளார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்
எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் ஆறுதலா இருக்கு. இப்ப வரைக்கும் விஜய் டெலிவிஷன், லைவ் ரிசல்ட்ஸ் க்ரீன்ல காட்டல.. சந்தோஷமா இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

ஆரிக்கு ஏதாவது ஆச்சா?
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கோடிக் கணக்கானவர்கள் விரும்பும் ஒருவனை காட்டாமல் மறைத்து கைவசம் உள்ள வித்தை எல்லாம் காட்டுகிறாய் ஆரிக்கு வெளியில் இருந்து வரும் ஆதரவை தாங்கி கொள்ள முடியாமல் பாலா ஏதாவது அடிதடி ஆயுதத்தை கையில் எடுத்து விட்டானா? ஆரிக்கு எதாவது ஆச்சுன்னா. தடங்கலுக்கு வருந்துகிறோம் என பதிவிட்டுள்ளார்.

முகமே வாடிப்போய் நிக்குது
முதல் புரமோவில் அனிதா சம்பத் சோகமே உருவாய் இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், எவ்வளவு மகிழ்ச்சியா இருந்த பொண்ணு முகமே வாடிப்போய் நிக்குது என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











