திருமணமான பெண் செய்யும் வேலையா இது?: ராதிகா ஆப்தேவை திட்டிய நெட்டிசன்கள்
Recommended Video

சென்னை: திருமணமான இந்திய பெண் இப்படியா உடை அணிவது என்று கூறி நெட்டிசன்கள் நடிகை ராதிகா ஆப்தேவை விளாசியுள்ளனர்.
ராதிகா ஆப்தே இந்தி படங்களில் படுபிசியாக உள்ளார். அவர் அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடித்த பேட்மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றார்.

ராதிகா
கோவாவில் பிகினி அணிந்து கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.

கலாச்சாரம்
திருமணமான இந்திய பெண் நம் கலாச்சாரத்தை மறந்து இப்படியா பிகினி அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

ஏன்?
நண்பர்களுக்கு முன்பு இப்படி தான் பிகினி அணிவதா? இது திருமணமான ஒரு பெண் செய்யும் காரணமா? இதில் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வேறு வெளியிடுகிறீர்களே என்று நெட்டிசன்கள் திட்டியுள்ளனர்.

முன்பும் கூட
ராதிகா ஆப்தே நெட்டிசன்களிடம் திட்டு வாங்குவது புதிது அல்ல. அவர் துணிச்சலாக பேட்டி கொடுப்பதை பார்த்தும் நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











