ஒரு துப்பட்டாவால் நடிகையை பார்த்து காரிக் காரித் துப்பிய நெட்டிசன்கள்
மும்பை: மூவர்ணக் கொடி நிறத்தில் துப்பட்டா அணிந்த நடிகை ப்ரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அடிக்கடி நெட்டிசன்களிடம் சிக்கிக் கொள்கிறார். பிரதமர் மோடியை சந்தித்தபோது கால் தெரியும்படி உடை அணிந்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார்.
தற்போது துப்பட்டாவால் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
துப்பட்டா
71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் தேசியக் கொடியின் நிறத்தில் துப்பட்டா அணிந்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ப்ரியங்கா சோப்ரா.

நெட்டிசன்கள்
ப்ரியங்கா சோப்ராவின் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர். அமெரிக்காவை பெருமையாக நினைக்கும் நீங்கள் அங்கேயே ஓடிப் போங்க என்று திட்டியுள்ளனர்.

அவமதிக்க வேண்டாம்
முட்டாள்.. எங்கள் நாட்டை அவமதிக்காதீர்கள். அமெரிக்காவுக்கு செல்க என்று ஒருவர் கடுப்பாக கமெண்ட் போட்டுள்ளார்.

சிந்து
சிந்து, சாய்னா நேவால், மித்தாலி ராஜ், தீபா கர்மாகர் போன்றவர்களை ஃபாலோ செய்யுங்கள் ப்ரியங்காவை ஃபாலோ பண்ண வேண்டாம் என்று ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











