ஆர்யாவை குஞ்சுமணின்னு சொன்ன த்ரிஷா: மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: நடிகை த்ரிஷா ஆர்யாவை குஞ்சுமணி என்று அழைக்க நெட்டிசன்ஸ் இடையில் வந்து மரண கலாய் கலாய்க்கிறார்கள்.
நடிகர் ஆர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். வயசை எல்லாம் கேட்கக் கூடாது. பொண்ணு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா. ஆனால் இதுவரை எந்த பொண்ணும் அமையவில்லை.
இந்நிலையில் நடிகை த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நெட்டிசன்ஸ் ஆர்யாவை கலாய்க்கிறார்கள்.
வாழ்த்து
ஆர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட்டியிருந்தார் நடிகை த்ரிஷா. இறுதியாக அவர் ஹக்ஸ் குஞ்சுமணி என்று குறிப்பிட்டிருந்தார். த்ரிஷாவின் ட்வீட்டுக்கு ஆர்யா இன்று பதில் அளித்துள்ளார்.
பதில்
இப்ப அவன் தேங்ஸ் குஞ்சிமணி னு ரிப்லை பண்ணுவான் பின்னாடியே பெண்ணியம் தேசியம் லாம் வரிசைல நிக்கும்...என ஒருவர் த்ரிஷாவின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டார். அவர் சொன்னது போன்று தான் நடந்துள்ளது.
நன்றி
த்ரிஷாவின் ட்வீட்டை பார்த்த ஆர்யா நன்றி குஞ்சுமணி என்று முத்த ஸ்மைலியுடன் பதில் அளித்துள்ளார்.
கலாய்
குஞ்சுமணியா
சோதிக்காதிங்க டா....

செல்லம்
சர்வம் படத்தில் ஆர்யாவும், த்ரிஷாவும் ஜோடியாக நடித்தனர். அந்த படத்தில் செல்லமாக கூப்பிட குஞ்சுமணி என்ற வார்த்தையை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










