Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா.. பாலாஜி முருகதாஸ் போட்ட ட்வீட்.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள ட்வீட்டுக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
பாலாஜி முருகதாஸுக்கும் ஜோ மைக்கேலுக்கும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
திஷா கால்ஷீட் பிரச்னை.. பிரபல ஹீரோ ஜோடியான ஸ்ருதி ஹாசன்.. பிறந்த நாளில் ஜில் அறிவிப்பு
குரைக்கிற நாய் கடிக்காது என்கிற ட்வீட்டை தொடர்ந்து தற்போது, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்கிற ட்வீட்டை பாலா போட்டு வைரலாக்கி உள்ளார்.
நல்லவரா கெட்டவரா
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ், நல்லவரா கெட்டவரா என புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ரசிகர்களை குழப்பி சூப்பரான கேம் விளையாடி 6 கோடிக்கும் அதிகமான வாக்குகளை அள்ளி ரன்னர் அப் ஆனார்.
ஆரியை தொடர்ந்து
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரியை தொடர்ந்து இந்த சீசனில் அதிக ரசிகர்களை அள்ளியது பாலாஜி முருகதாஸ் தான். சமூக வலைதளங்களில் ஆரி ரசிகர்களுக்கும் பாலா ரசிகர்களுக்கும் இடையே தான் மிகப்பெரிய சண்டையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்படி சண்டை போட்டே தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களை வெற்றி பெற வைத்து விட்டனர்.
கொண்டாட்டத்தில் பாலா
டிக்கெட் டு ஃபினாலேவில் தோற்கும் போது, ரொம்பவே அப்செட் ஆகி இருந்தார் பாலாஜி முருகதாஸ். நிச்சயம் தனக்கு எந்த டைட்டிலும் கிடைக்காது என்கிற முடிவுக்கு வந்த பாலாவுக்கு, ரன்னர் அப் ஆனதும் ரொம்பவே சந்தோஷப்பட்டார். தொடர்ந்து சமீபத்தில் நடந்த பிக் பாஸ் கொண்டாட்டத்திலும் பாலா கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடியுள்ளார்.
ஜோ மைக்கேலுடன் பிரச்சனை
ஜோ மைக்கேலின் ஃபேஷன் நிறுவனத்தை டுபாக்கூர் நிறுவனம் என பாலா கூறியதாக ஜோ மைக்கேல் தொடர்ந்து பாலா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார். சமூக வலைதளத்தில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய சண்டையும் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்ட ஆடியோவும் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருந்தது.
ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவில் பேசிய பாலாஜி முருகதாஸ், சிலர் சமூக வலைதளத்தில் தன்னை பற்றி அவதூறாக பரப்பும் விஷயங்கள் தனக்கு பிடிக்கவில்லை. பெண்களை பற்றி ஒரு போதும் தான் தவறாக பேசவில்லை. அந்த ஒரு வார்த்தை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுது என பேசியிருந்தார். அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரத்தை பற்றி தான் பாலா அப்படி பேசுகிறார் என விவாதங்களும் வலுத்தன.
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
இந்நிலையில், தற்போது பாலாஜி முருகதாஸ் "கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா" என ட்வீட் போட்டு வைரலாக்கி உள்ளார். அந்த ட்வீட்டுக்கு கீழே பாலாவின் ரசிகர்களும், பாலாவின் ஹேட்டர்களும் ஏகப்பட்ட பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். ஏன் இப்போ திடீர்னு இப்படியொரு ட்வீட்டை போட்டுருக்கீங்க பாலா ஏதாவது பிரச்சனையா? என்றும் கேட்டு வருகின்றனர்.
ஏன் சோகம்
பாலாவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர், பிக் பாஸ் கொண்டாட்ட போட்டோவில் ஏன் கடைசியில சோகமா நிக்கிறீங்க என கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த பாலாஜி முருகதாஸ், ஐ எம் சூப்பர் ஹேப்பி எனக் கூறி தனது ரசிகர்களையும் சூப்பர் ஹேப்பி ஆக்கி உள்ளார்.
நீங்க நல்லவன் தான்
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என பாலாஜி முருகதாஸ் ட்வீட் செய்துள்ள நிலையில், கெட்டவனா இருந்தா, இப்படிலாம் டிரெண்டாக முடியாது பாலா.. உண்மையாவே நீங்க ரொம்ப நல்லவன் தான் என கமெண்ட் செய்ய, உங்களை போல ரசிகர்கள் கிடைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி எனக் கூறியுள்ளார்.
அசுரன் இல்ல ஈஸ்வரன்
"அடுத்து என்ன "நான் அழிக்க வந்த அசுரன் இல்ல, காக்க வந்த ஈஸ்வரன்" அதானே ப்ரோ." என பாலாஜி முருகதாஸ் ட்வீட்டை இந்த நெட்டிசன் ரொம்பவே பங்கம் செய்துள்ளார். மேலும், பல பாலா ஹேட்டர்களும் ஏகப்பட்ட தரக்குறைவான கமெண்ட்டுகளை போட்டு திட்டி வருகின்றனர்.