ஆண்டவரே.. அப்படியே ஆயுத பூஜைக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க.. வீட்டுல மிக்சர் தீர்ந்து போச்சாம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
அதிலும், நாளை ஆயுத பூஜை கொண்டாட உள்ள நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க, மிக்சர் தீர்ந்து போச்சாம் என மரண கலாய் கலாய்க்கின்றனர்.
பிசிக்கல் டாஸ்க் அதிகம் கொடுக்காமல் இருப்பது பிக் பாஸ் ரசிகர்களை ரொம்பவே அப்செட் செய்துள்ளது.

அர்ச்சனா பக்கம் வாங்க
முதல் மற்றும் இரண்டாவது புரமோ என இரண்டிலும் சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி பஞ்சாயத்தை பத்தியே பேசிட்டு இருக்கீங்களே கமல் சார், அந்த நாட்டாமை பண்ணுற அர்ச்சனாவை கொஞ்சம் வெளுத்துட்டு போங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை புரமோவுக்கு கீழே கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.

எடிட்டர் உண்மையை சொல்லுபா
"Editor உண்மைய சொல்லுபா...இது sanam மேல பிழை என்று கை தூக்கியவர்களா? பிழை இல்லை என்று கை தூக்கியவர்களா?" என இரண்டாவது புரமோவை பார்த்து விட்டு ஒரே குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு கேட்டு வருகின்றனர். பிக் பாஸ் புரமோ இருப்பது போல நிகழ்ச்சி இல்லாததால் தான் இப்படி கேக்குறாங்க..

இப்போ நான் என்ன சொல்றது
நாடா? காடா? டாஸ்க்கில் கமல் சார், சண்டையை பத்தி சனம் ஷெட்டியிடம் கேள்விகளாக கேட்டு துளைத்தெடுக்கும் நிலையில், சனம் ஷெட்டியின் ரியாக்ஷன், அய்யோ.. இப்போ நான் என்ன சொல்றது என எலி படத்தின் வடிவேலு போட்டோவை போட்டு அந்தர் பண்ணி உள்ளார் இந்த நெட்டிசன்.

வாய் திமிர்
ஷிவானி நாராயணன் எதுவும் பேசவில்லை என சொல்வார்கள், ஆனால், அவர் ஏதாவது பேசி விட்டால் உடனே வாய் திமிர் என சொல்வார்கள், என இந்த புரமோவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னாலும், நேத்து நடந்த நிகழ்ச்சியை வச்சு ஷிவானி ரசிகை ஒருவர் பொங்கி எழுந்து இந்த கமெண்ட்டை அடித்துள்ளார்.

அப்புறம் எதுக்கு பஞ்சாயத்து
"சனம் பக்கம் நியாயம் இருக்குன்னு நினைக்கிறவங்க கை உயர்த்துங்க சொன்னா, சுரேஷே உயர்த்துறாங்க. அப்போ எதுக்கு இந்த பஞ்சாயத்து. சுரேஷ் இதிலும் கூட யுக்தியை பயன்படுத்துகிறார் போல தோன்றுகிறது." என இந்த ரசிகர் ரொம்பவே யோசித்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார். சும்மா

ஷாக்கான ரசிகர்கள்
பிக் பாஸ் எடிட்டரின் நரி தந்திரம் நல்லாவே ஒர்க்கவுட் ஆகிறது. சரியான இடத்தில் எடிட்டட் ஷாட் வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் குழம்ப வைத்து வருகிறார். "அட... பொசுக்குனு சனத்துக்கு ஆதரவா இந்த மொட்ட கையை தூக்கிருச்சி.. இது என்ன ஸ்ட்டேர்ஜியோ?" என இந்த ரசிகர் பதறி போயுள்ளார்.

பொரி கடலை
இந்த வாரம் எதிர்பார்த்த அளவுக்கு ஒண்ணுமே இன்ட்ரஸ்டிங்கா இல்லை என்றும், ஆஜீத், ஆரி மட்டும் இல்லை, எல்லா பயலையும் தூக்கி அந்த கண்ணாடி ரூமுக்குள் வச்சு பூட்டுங்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் கடுப்பில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், "ஆண்டவரே அப்படியே அவங்களுக்கு ஆயதபூஜையை முன்னிட்டு பொரிகடலை இரண்டு மூட்டை வாங்கி கொடுத்துட்டு போங்க!... ஏன்னா மிக்சர் தீர்ந்து போச்சாம்!" என நக்கல் அடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











