Don't Miss!
- Sports
ரோகித்தின் கருத்தில் முரண்பாடு.. பும்ராவின் விஷயத்தில் நீடிக்கும் மர்மம்.. இனி நேரடியாக ஐபிஎல் தானா?
- News
நாடாளுமன்றத் தேர்தல்.. பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்.. ஆ.ராசா பேச்சு!
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Finance
தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000-ஐ தாண்டியது.. இனி சாமானியர்கள் வாங்குவது கடினம் தான்..!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
40 கதைகள் கேட்டுத் தூங்கிட்டேன்.. ஆடியோ லாஞ்ச் பேச்சால் வம்பில் சிக்கிய அஸ்வின்.. பறக்கும் மீம்கள்!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் குமார் ஹீரோவாக என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்னையில் அந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் அரங்கேறியது.
அந்த ஆடியோ லாஞ்சில் 40 கதைகள் கேட்டுத் தூங்கி விட்டேன் என அவர் பேசியதால் நெட்டிசன்கள் மீம்களை போட்டு அஸ்வினை வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஹீரோவான அஸ்வின்
திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த குக் வித் கோமாளி அஸ்வின் குமார் இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். சென்னையில் நடைபெற்ற அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

40 கதைகள் கேட்டு தூங்கிட்டேன்
அந்த விழாவில் பேசிய நடிகர் அஸ்வின் குமார் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க.. பொதுவாக கதை பிடிக்கவில்லை என்றால் இயக்குநர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகள் கேட்டு அப்படி தூங்கி இருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட முதல் கதை ஹரிஹரனோட கதை தான் என பேசி இருந்தார்.

ஆணவத்தில் அஸ்வின்
இயக்குநர்கள் கஷ்டப்பட்டு ஹீரோவுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது அதை முழுதாக கூட கேட்க முடியாத அளவுக்கு அப்படி எத்தனை படங்களில் அஸ்வின் நடித்து விட்டார். இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், கோலிவுட் இயக்குநர்களை இப்படி பகைத்துக் கொண்டால் எப்படி அஸ்வினுக்கு அப்படி என்ன ஆணவம் என நெட்டிசன்கள் மீம்களாக போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

தலையில் மண்
வேறு யாருமே தேவையில்லைங்க.. தனக்குத் தானே தலையில் மண் வாரிப் போட்டுக் கொண்டார் குக் வித் கோமாளி அஸ்வின் என்று நெட்டிசன்கள் பங்கமாக மீம் போட்டுக் கலாய்த்து வருகின்றனர். என்ன சொல்ல போகிறாய் இசை வெளியீட்டில் அஸ்வின் என்ன சொல்ல போகிறாருன்னு பார்த்தா இப்படி சொல்லிட்டாரே என கலாய்த்து வருகின்றனர்.

2 விஜய் 4 ரஜினி
ஆடியோ லாஞ்சிற்குள் வந்தவுடன் அஸ்வின் தன்னை 2 விஜய் ஆகவும் 4 ரஜினியாகவும் உணர்கிறார் என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இதற்கு மேல் ஆடியோ லாஞ்சில் அஸ்வின் இப்படி பேசவே கூடாது என நெட்டிசன்கள் மீம்களாக போட்டு வச்சி செய்து வருகின்றனர்.

ஒரே ஒரு ஆடியோ லாஞ்ச்
ஒரே ஒரு ஆடியோ லாஞ்ச் தான் டோட்டல் கரியரும் க்ளோஸ் என வடிவேலு மீம்களை போட்டு அஸ்வின் தெரியாமல் உளறியதை பார்த்து படையெடுத்து தாக்கி வருகின்றனர். ஹீரோவான பின்பும் இவர் கோமாளியாகவே இருக்கிறாரே என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.